பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2
இருவேறு உலகம்

கொழும்பு விமான நிலையத்திற்கு வெளியே படகு போன்ற பல வெளிநாட்டுக்கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. தங்கள் குடும்பத்துடன் அந்தக் கார்களில் வந்திறங்கிய பரமகுருவின் உறவினர்கள், அவரை வரவேற்க விமானதள வரவேற்பறையில் காத்திருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் கொழும்பு நகரத்தின் பிரதான இடங்களில், பிரபலமான தொழில்கள் செய்து செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்.

அவர்களது மனைவிகள் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் அணிந்து கொண்டு பளிச் சென்று காட்சி அளித்தனர். அவர்களது கழுத்திலும், காதிலும், கைகளிலும் அணிந்திருந்த தங்க, வைர நகைகள் மாலை நேரத்து சூரியனின் பொற் கிரணங்களில் மின்னி ஜொலித்தன.