பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தென்னைமரத் தீவினிலே....

இதைக் கேட்டதும் தங்கமணி கலகலவென்று சிரித்தாள். தாத்தாவிற்குச் சொந்தமாக ஐந்து கார்கள் இருக்கின்றன. வீட்டு உபயோகத்திற்கு மட்டும் மூன்று கார் இருக்கு. இப்போ, நாம் வெளியே போகப் போகிற காடிலாக் வான். கப்பல் மயதிரி பெரிசா இருக்கும். எல்லாரும் ஏறிக் கொண்டாலும், பாதி இடம காலியாகத் தான் இருக்கப் போகிறது. வா போகலாம்” என்று சிரித்தபடியே அவன் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்.

தங்கமணியின் வெள்ளை உள்ளமும், கர்வமில்லாத, அன்பான பேச்சும் அருணகிரியின் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அதற்கு மேலும் மறுப்பேதும் கூறாமல் அவளுடன் சேர்ந்து சென்று காரில் உட்கார்ந்து கொண்டான்.

இதற்குள், காந்திமதி, பாபு ராதா எல்லோரும் டிரஸ் செய்து கொண்டு தயாராக வந்து விட்டனர். கல்யாணியும், லட்சுமி அம்மாளும் வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். காந்திமதியிடம், குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடு, திட்டாமல், அடிக்காமல், எல்லோரையும் கையைப் பிடித்து அழைத்துப் போய் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு போய் விட்டு வா,” என்றாள் லட்சுமி அம்மாள்.

கைடு, கனகசபையும், தங்கமணியும், அவளுடைய செல்ல நாய்க்குட்டி ‘தும்பு’வோடு முன் சிட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்.