உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 325 மயங்கிக் கிடந்த மயில். துள்ளிக் குதித்து எழுந்து போதை பொங்கிடச் சிரித்தாள். ஆதப்பன் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டன. உறங்காப்புலியிடம் இழுத்துச் செல்லப்ட்டான். அவனுக்கு முன்னால் அந்த மயில் சென்று உறங்காப் புலியின் தொடையில் தலை வைத்துச் சாய்ந்து கொண்டாள். ஆதப்பனைக் கண்ட உறங்காப்புலி வெறித்தனமாகச் சிரித்தான். மது மயக்கம் கொண்ட மயிலின் தலையைத் தடவிக் கொடுத்தபடி, உறங்காப்புலி வீரர்களைப் பார்த்து "உம்! இவனை இரவு முழுதும் ஒரு அறையில் போட்டுப் பூட்டுங்கள்! காலையில் இவன் காணப்போகும் பழிவாங்கும் படலத்தை நினைத்து நினைத்து மயிலோடு இணைந்து இந்த மஞ்சத்தை இன்பத்தால் நனைக்கிறேன்" என்று தடுக்கி விழும் சொற்களால் உத்தரவு பிறப்பித்தான். அவன் சொன்னபடி மதுவோடு ஆடினான்/ மயிலோடு கூடினான்! விடிவதற்கு முன்னர், வீரம்மாளைச் சந்தித்து, விடிந்தவுடன் நடக்கப்போகும் வேடிக்கையைப் பார் என்று அழைப்பு விடுத்துத் திரும்பினான். பட்டமங்கலம் அம்பலத்திற்குச் சொந்தமான எண்ணெய்ச் செக்கினைச் சுற்றி அந்த ஊர் மக்கள் பெரும் பகுதியினர் கூடியிருந்தனர். பாகனேரியில் நடந்ததற்குப் பழி வாங்கப் பட்டமங்கலம் வகுத்துள்ள திட்டத்தின் வெற்றியினைக் கண்டிட ஊரார் ஆவலுடன் இருந்தனர். "முடிந்து போன விவகாரம் - இருநாட்டுக்கும் சம்பந்தம்கூட ஆகிவிட்டது! இனிமேல் எதற்காகப் புது வம்பை விலைக்கு வாங்குகிறார்கள்?" என்று ஊராரில் ஒரு பகுதியினர் பேசினார்கள். "ஆதப்பனை நேற்றிரவே கைது செய்து பட்ட மங்கலம் அரண்மனையில், கல்யாணி நாச்சியாருக்குத்