பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு இறையனாரகப்பொருளுரையாலும், மேலே சுட்டி ய ஆசி ரியப்பாவினுள்ளே “அந்நாளிலக்கண மகத்தியமதனொடு பின்னாட்செய்த பிறங்கு தொல்காப்பியம்” என வருவத னாலும் நன்கு விளங்கும். ஆகவே இசைத்தமிழிலக்கணம் கடைச்சங்கத்தார்க் குக் கருவி நூலாகவிருந்த தில்லை யென்பதும் இடைச்சங் கத்தார்க்கே இசை நுணுக்கமுதலிய இசைத்தமிழிலக்க ண நூல்கள் கருவியாகவிருந்தன வென்பதும் நிச்சயமா யின. இடைச்சங்கத்திறுதியிலும் கடைச் சங்கத்துத் தொடக்கத்திலுமிருந்த கூன் பாண்டியன் காலத்தைக் கூறவே, இடைச்சங்கமொழிந்த காலமும் இசைத் தமிழி லக்கணம் ஆட்சியிலிருந்தொழிந்த காலமும் தாமே பெற) ப்படும். கூன் பாண்டியன் காலம் நாலாயிரம் வருஷங்க ளுக்கு முன்னுள்ளதென்பது மேலே காட்டி னாம். ஆத லின் அத்தேவாரம் செய்தருளப்பட்ட காலமும் அதுவே யா மென்பது நன்றாகத் துணியப்படும். இதனாலும் திரு ஞானசம்பந்தர் காலம் நா லா யிரம் வருஷங்களுக்கு முன் னுள்ள தென்பது நிச்சந்தேகமாம். இனி, சாக்கியர் புத்தர் என்னும் நாமங்கள் கபில வாஸ்துவிலே பிறந்த புத்தருடைய காலமாகிய இரண் டாயிரத்தைஞ்னூறு வருஷங்களுக் குட்பட்டனவேயாக வும், நாலாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட சம்பந்தரு டைய தேவாரத்திலே எவ்வாறு வந்தனவோவெனில், கெளதமர் ஆதிநாளிலே புத்தர் என்னும் பெயரோடு நாஸ்திகமதத்தைப் போதித்தாரென்றும், விஷ்ணு சின னுக்குப் புத்திரராகக் கலியுகாரம்பத்திலே யவதரித்துப் புத்தர் என்னும் பெயர் பூண்டு வைதிகமத விரோதமான ஒரு மதத்தை யுலகிற் பரவச் செய்வாரென்றும் முறையே ஸ்காந்தத்திலும் பாகவதத்திலுங் கூ றப்படுதலால் அப்