பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

. பேருடைய இன்பக் கனவையும் சிதைத்து விட்டனர்! என்னுடைய உயிரை உன் காலடியில் வைத்து விட்டு, உடலை மட்டும் சுமந்து செல்கிறேன். எங்கேயென்றுதானே கேட்கிருய்? அது எனக்கே தெரியாது!எந்தப் பணம் என் எண்ணங்களில் மண்ணைப் போட்டதோ, அதே பணத்தை என் பிறந்த மண்ணில் வீசி விளையாடும் நிலை வந்தவுடன்தான், நான் இனித் திரும்பு வேன்; ஆனுல் ஒன்று. என்னை நீ கோழை என்று மட்டும் முடிவு கட்டிவிடாதே!... என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்களைப் பழி வாங்கிடத்தான் நினைத்தேன். ஜென் ம விரோதியானுலும், அன்பு காட்டு என்ற காந்தித் தெய்வம் என் மனசை மாற்றி விட் டார்! தெய்வானை! நான் தெம்மாங்கு பாட, நீ எதிர்த் தெம் மாங்குப் பாடல் பாடுவாயே அந்தப் பாட்டை நீ எப்படி மறக்க முடியும்? மணவறையில் நீ என் அருகிருந்து உன் அன்பைக் கண்களின் வழியே செலுத்தும் போது, உன் பூ விரலிலே போட்டு நான் அழகு பார்க்க வேண்டுமென்று ஆசைப் பட்ட இந்த மோதிரத்தை அனுப்பியிருக் கிறேன். இதுதான் என் நினைவுப் பரிசு! உன் ஆசை முகத்தை மீளவும் காண நான் கொடுத்து வைத்திருக்கிறேனே, என் னவோ? - இப்படிக்கு, மாணி க் கம்.