பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 13 பெண்களும் இருந்திருந்தால் துணைதேடல் எளிதாகும்; ஆனால் அங்கே ஆண்கள் மட்டுந்தானே உள்ளனர்! ஆயினும் அவள் ஒரு துணையைத் தேடிவிட்டாள்; ஒரு பெரிய துணையை நல்ல துணையை பயனுள்ள துணையைத் தேர்ந்தெடுத்து விட்டாள். இனி அவளுக்கு இன்பமாகப் பொழுது கழியும்! அவள் தன் பெட்டியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வெளியில் வைத்தாள். புத்தகம் என்றறிந்ததும், இளைஞரின் கண்கள் அதன்மேல் - அவள் மேல் அல்ல - பதிந்தன. அதன் மேலட்டையில், அன்றில், எம்.ஏ., திருச்சிராப்பள்ளி' என்று பேரும் ஊரும் பொறிக்கப்பட்டிருந்தன. அன்றில்’ என்ற பெயர் பல எண்ணங்கள் துலங்கும்படி இளைஞரின் உள்ளத்தைத் தூண்டிவிட்டது. 'அன்றில் என்ற பெயருக்கு உரியவள் இவள்தானோ? அல்லது இது வேறு யாருடைய புத்தகமாகவாவது இருக்க லாமோ? இருக்க முடியாது. பெயரின்கீழே திருச்சிராப்பள்ளி என்றிருப்பதாலும், இவள் திருச்சி நிலையத்தில் வண்டி ஏறியதாலும் இது இவள் புத்தகமாகத்தான் இருக்க வேண்டும் இந்தப் பெயர் இவள் பெயராகத்தான் இருக்க வேண்டும். மேலும், வெளியூர் செல்பவள். தன் வீட்டி லிருந்து தனது புத்தகத்தைத்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். எம்.ஏ. படித்த பெண் என்று நம்புவதற்குரிய குறிகளும் இவள் தோற்றத்தில் இலைமறை காய்களாய் இருக்கின்றன. ஆகவே, அன்றில் இவள்தான் - இவளே அன்றில்' - என்ற முடிவுக்கு வந்த இளைஞர் இன்னும் என்னென்னவோ எண்ணினார். அன்றில் என்பது ஒருவகைப் பறவையின் பெயர். ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் எப்போதும் இணை பிரியாது வாழுமாம். ஒன்றை ஒன்று பிரிந்து பிறகு