பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 33 திறக்கத் தான் உதவிய போது, அவள் வாய்திறந்து பேசாது கண் பார்வையாலேயே நன்றி தெரிவித்தாள் என்றாலுங்கூட, அப்போது அவள் தந்தையார் அவளுக்குப் பதிலாக வாய்திறந்து ஏழரை கட்டையில் பேசி நன்றி தெரிவித்தார். இப்போது இங்கே அறவணனுக்குப் பதில் அன்றிலுக்கு நன்றி சொல்ல யாரும் இல்லையே. இவர் என்ன பெண் பிள்ளையா? எனவே ஒரு விதமாக அன்றிலை நோக்கி, 'உங்களுக்கு மிகவும் நன்றி' என்றார். 'இருக்கட்டும்' என்றாள் அவள். - பின்னர் அன்றில் தனது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்திருந்த பலகையில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லையாதலாலும், அதற்கு எதிர்ப் பலகையில் நாட்டுப் புறத்துக் கிழவர் ஒருவரும் கிழவி ஒருத்தியும் தம் பேரப்பையன் ஒருவனுடனும் முட்டை முடிச்சுகளுடனும் அண்டா அடுக்குகளுடனும் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததாலும், அன்றில் இருந்த பலகையி லேயே அறவணனும் அமர்ந்து கொண்டார். அன்றிலும் அறவணனும் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தாலும், அவர்கட் கிடையிலே அவர்களின் கைப்பெட்டிகள் இரண்டும் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டிருந்தன. வந்து அமர்ந்த ஐந்து நிமையம் (நிமிடம்) வரையிலும் அறவணன் எதிர்ப் பலகையில் கண் செலுத்தினார். கிழவனும் கிழவியும் ஒருவருக்கொருவர் வெற்றிலைபாக்கு சுண்ணாம்பு புகையிலை கொடுத்து வாங்கிக் கொள்வதையும், கொஞ்சிக் குலவுவது போல் அன்புரிமை கொண்டாடிக் கொள்வதையும் அறவணனும் அன்றிலும் பார்த்துச் சுவைத்தபடியே தாங்களும் ஒருவரை யொருவர் பார்த்துப் புன்னகைபூத்துக் கொண்டார்கள். -