பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 39 போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்றெண்ணு கிறேன்" போய்ச் சாப்பிட்டு வாருங்கள்' நீங்கள் சாப்பிடவில்லையா?” 'ஆண்களைப்போல் இரைக்க இரைக்க ஒடி இரைக்க இரைக்கச் சாப்பிட்டு வர என்னால் முடியாது. அதனால், நான் சென்னையிலுள்ள பாட்டியின் வீட்டிலிருந்து புறப்படும் போதே என் பாட்டி உணவு தயாரித்துக் கொடுத்திருக் கிறாள். உங்களுக்குத் தடையில்லை என்றால் நீங்களும் உண்ணலாம்' இருக்கட்டும்; நான் போய் நிலைய உணவு விடுதியில் சாப்பிட்டு வந்து விடுகிறேன்' என்று சொல்லி அறவணன் கீழே இறங்கிச் சென்றார். அன்றில் தான் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தும் பிரிக்காததுமாய் இருக்கும்போதே அறவணன் திரும்பி வந்து விட்டார். அதற்குள்ளாகவா சாப்பிட்டு வந்து விட்டீர்கள்?" என்று கேட்டாள். "ஆமாம்' என்று அவர் பதில் சொன்னார். அவர் இன்னும் சாப்பிட்டிருக்க முடியாது என்பதை அவர் முகம் அவளுக்குத் தெரிவித்தது. அறவணன் வண்டிக்குள் வந்து எதையோ தேடிக் கொண்டிருந்தார். என்ன தேடுகிறீர்கள்?' என்று அன்றில் கேட்டாள். ' என் பணப்பை காணவில்லை. நான் வண்டியை விட்டு இறங்கியபோது, எவனோ இடித்ததுபோல் தெரிந்தது. அவன்தான் பையை (மணிபர்ஸ்) அடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும்' " அப்படியென்றால் நீங்கள் சாப்பிடவில்லையல்லவா?'