பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 53 நீங்கள் தான் என்னை மன்னிக்கவேண்டும், நீங்கள் எனக்குக் கடிதம் எழுதினால் அதனை எங்கள் வீட்டில் உள்ளவர்கள் பார்த்து விட்டால், அவர்கள் என்னைத் و و و தவறாகப் புரிந்து கொள்வார்கள் அல்லவா 'உண்மைதான்! நான் பெரிய தவறு செய்ய இருந்தேன் - மன்னித்து விடுங்கள். கடிதம் எதுவும் எழுத மாட்டேன், உங்களை மறந்து விடுகிறேன்.' என்று பேசிக்கொண்டிருந்தபோதே, இரவு 10-40 மணிக்குப் புகைவண்டி திருச்சிராப் பள்ளி சந்திப்பில் வந்து நின்றது. போய் வருகிறேன்' போய் வாருங்கள்! நானும் போய் வருகிறேன்'. போய் வாருங்கள்' என்று விடைபெற்றுக் கொண்டு அறவணனும் அன்றிலும் பிரிந்தார்கள். தன்னை வரவேற்று அழைத்துப் போக, நிலையத்திற்கு வந்திருந்த தந்தையாரோடு சேர்ந்து கொண்டு அன்றில் நடந்துகொண்டிருந்தாள். அறவணனோ, சட்டைப்பையில் வைத்திருந்த பயணச் சீட்டைக் (டிக்கட்) கையில் எடுத்து வைத்துக்கொண்டு பணம் போனாலும் இதுவாவது தப்பிப் பிழைத்ததே எண்றெண்ணியபடி நடந்து கொண்டிருந்தார். ஒருவர்க் கொருவர் உருவம் மறையும் வரையிலும் அன்றிலும் அறவணனும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். யாரையம்மா பார்க்கிறாய்? என்று அன்றிலின் தந்தை மாசிலாமணி கேட்டார். 'யாரையும் இல்லையப்பா? என்று சொல்லிவிட்டு ஒரு முறை அன்றில் திரும்பிப் பார்த்தாள். அப்போது அறவணன் உருவம் தெரியவேயில்லை.