பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சுந்தர சண்முகனார் 5 நள்ளிரவு ஒரு மணிக்குமேலும் புகைவண்டி ஒடிக்கொண் டிருக்கிறது. அதில் அன்றிலும் அறவணனும் பயணஞ் செய்து கொண்டிருக்கின்றனர். அன்றில் உணவு அளிக்க அறவணன் உண்ணுகிறார். இருவரும் ஏதோ பேசிக்கொண் டிருக்கின்றனர். மீண்டும் வண்டி ஒடுகிறது. அன்றில் உணவு அளிக்கிறாள்.அறவணன் உண்ணுகிறார். மீண்டும் மீண்டும் புகைவண்டி ஒடிக்கொண்டேயிருக்கிறது - அன்றில் உணவளித்துக் கொண்டேயிருக்கிறாள் - அறவணன் உண்டு கொண்டேயிருக்கிறார். இரவில் எத்தனை மணிக்கு மேல் அன்றில் உணவு கொடுப்பது எத்தனை மணிக்கு மேல் அறவணன் உண்ணுவது! இரவில் எத்தனை முறை அன்றில் உணவு கொடுப்பது! எத்தனை முறை அறவணன் உண்பது! இது நடக்கக் கூடியதா? - ஆம், நடந்தது! அன்றிலின் வீட்டில் அவள் படுக்கை யறையில் அவளது கற்பனைக் கண் முன்பு, புகைவண்டி ஒடிக் கொண்டேயிருக்கிறது. அவள் உணவு படைத்துக் கொண்டேயிருக்கிறாள். அறவணன் உண்டு கொண்டே யிருக்கிறார். இருவரும் ஏதேதோ பேசியபடியிருக்கிறார்கள். அன்றிலுக்கு உறக்கம் கொள்ளவில்லை. அன்று புகை வண்டியில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் மாறி மாறி அவளுக்குத் திரைப்படம் காட்டிக் கொண்டிருந்தன. அன்றில் தன் அப்பா, அண்ணன் ஆகியவரைத் தவிர்த்து வேறு எந்த ஆடவரோடும் நெருங்கிப் பழகியதில்லை. அவள் மிகவும் கூச்சப்பட்டவள்-நாணங் கொண்டவள். எம்.ஏ படித்துவிட்டு ஒரு கல்லூரியில் வேலை பார்த்துக் கொண் டிருக்கும் அவள், சில சமயம் ஆடவர் கூட்டத்துள் அகப் பட்டுக் கொள்வாள். தொழில் முறையாலும், கலைகல்வி