பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சுந்தர் சண்முகனார் என்றெல்லாம் பல எண்ணியவாறு அன்றில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். உறக்கம் கொள்ளாததால், ஏதேனும் ஒரு நூலையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாம் என்றெழுந்து தன் கைப்பையைத் துழவினாள். அவளறியாது அறவணன் வைத்திருந்த பிரெஞ்சு ஆசான்' என்னும் நூல் அப்போது அவளுக்குத் தட்டுப்பட்டது. 'ஆ' நாம் வேண்டாமென்று மறுத்தும், நமக்குத் தெரியாமல் எப்படியோ இந்தப் புத்தகத்தை நம் பைக்குள் வைத்துவிட் டிருக்கிறாரே! நம்மிடம் உணவு பெற்று உண்ட கடனைக் கழிப்பதற்காகவே அந்த உயர்ந்த பண்பாளர் இந்த வேலையைச் செய்திருக்கிறார் என்று நெஞ்சம் உருகினாள். மீண்டும் மீளாத எண்ணத்தில் ஆழ்ந்தாள். எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ தெரியாது. இறுதி யாக் அந்த நூலை மார்போடணைத்தபடி அன்றில் உறக் கத்தில் ஆழ்ந்தாள்.