பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 83 எனக்கு அடுத்தபடியாக இன்னொருவர் - அவரும் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அவருக்கு அடுத்தபடியாக மற்றொருவர் என இருவர் பெயர்கள் அடுத்தவர் பட்டியல்’ (waiting list) வரிசையில் குறிப்பிடப்பட்டிருந்தன. அவ்விரு பெயர்கட்குள்ளும் அறவணன் என்னும் தங்கள் பெயரே முதலில் இருக்கக் கண்டேன். தங்கள் பெயரைக் கண்டதுமே, தங்களுக்குத்தான் அந்த வேலை கிடைக்கவேண்டும் என விரும்பினேன். அதனால், நான் அந்த வேலைக்கு வர வில்லை என எழுதிவிட்டேன். பின்னர் அந்த இடம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.' 'இவ்வளவு விவரம் எனக்குத் தெரியாதே. நான் அரசிதழைப் பார்க்கவுமில்லை; யாரையும் இதுகுறித்து வினவவுமில்லை. எப்போதும்போல் இயற்கையாக இருந்து கொண்டிருந்தேன். இந்த வேலை கிடைக்கும் என்ற உறுதியும் எனக்கு இருக்கவில்லை. எதிர்பாரா வகையில் வேலையை ஏற்றுக் கொள்ளும்படி ஆணை வந்ததும் மகிழ்ச்சியுடன் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டேன். ஆனால், உங்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை எனக்காக நீங்கள் இழந்துவிட்டதை யறிந்து வருந்துகிறேன். அதே நேரத்தில், எனக்காக விட்டுக்கொடுத்த உங்கள் பேரன்புக்கு என்ன கைம்மாறு புரிவது என்றறியாது திகைக்கிறேன். என்னவிருந்தாலும் எனக்காக நீங்கள் இவ்வளவு செய் திருக்கக்கூடாது. உலகில் வேறு எவரிடமும் இந்த அளவு எதிர்பார்க்க முடியவே முடியாது!’ இருக்கட்டும், எனக்குத்தான் மகளிர் கல்லூரியில் இதே போன்ற வேலை கிடைத்துவிட்டதே! இதற்காக நீங்கள் ஒன்றும் தொல்லைப்பட்டுக்கொள்ள வேண்டாம்.' என்று அன்றிலும் அறவணனும் உரையாடிக்கொண்டே, எதிர்கால வாழ்க்கைப் படிகளை ஒவ்வொன்றாக ஏறிக்