பக்கம்:தெய்வ மலர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

எலிகளும் ஓடிப் போய்விட்டன. குட்டிச் சுவரை தாண்டிக் கொண்டு ஓடின. பொந்துகளுக்குள் போய் புகுந்து கொண்டன.

ராஜா எலியும் ஒடப் பார்த்தது. பெரிய கொழுத்த உடம்பைத் துக்கிக் கொண்டு அதல்ை

ஒட முடியவில்லை. பக்கத்தில் உள்ள பொந்தில் நுழையப் பார்த்தது. உடம்பு உள்ளே நுழைய வில்லை. அங்குமிங்கும் ஒடிப் பார்த்தது. ராஜா எலிக்கு ஒன்றும் முடியவில்லை. இன்ருேடு தொலைந் தோம்’ என்று நினைத்துக் கொண்டே ஆலமரத்தின் கீழ் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தது.

உடம்பு முழுவதும் போகத் தான் இடம் இருந்தது. ஆல்ை, அதன் நீண்ட வால் மட்டும் தெரியும்படி வெளியே கிடந்தது. பாய்ந்து வந்த பூனையும் எலியைத் தேடி அலைந்து வருகிறபோது, ராஜா எலியின் வால் மட்டும் வெளியே தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/25&oldid=580298" இலிருந்து மீள்விக்கப்பட்டது