பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தெற்கு ஜன்னலும் நானும் நேருபிரான் சொன்னதுபோல் - வீர நிருத்தியமே இன்பவிதை! காருலவும் மலைஉச்சி - ஏறிக் காண்பவரே மகிழ்வாளர்! கீழ்கீழே மண்மடுவில் - துளியாம் கேடுமிலை வாழ்வதற்கே! சூழ்கின்ற பனிதின்றே - கதிரோன் சுடர்வதுவும் மலைத்தலையில்! அச்சத்தால் குனியாமல் - தாவும் ஆபத்தைப் பணியாமல் துச்சமாய் மிதித்துவிட்டால் - இன்பம் துள்ளிவந்தே உனைத்தழுவும்! Ç