பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 55 நீசி. இரவின் இடுப்பு. மெளனங்களின் மர்ம மையம். பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் நீதான் கூடாரம் காலம்காலமாய் நீ நடத்தும் நிசப்தக்கச்சேரிக்கு நிலவும் நட்சத்திரங்களும் மட்டும் விசிறிகள் அல்லநானும்தான். உன் குணம் அமைதி என்று சொன்னாலும் பல அபாயங்கள் சரித்திரங்களில் பதிவாகிக் கொண்டிருப்பது உன்னால்தான். அச்சங்களின் அச்சகம் நீதான் என்றாலும் விடியல் விரைவில் என்ற நம்பிக்கை நூலின் பதிப்பகமும் நீதான்! O