பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 75 3 உனது இதய வான அருள் மழை இவைகள் மீது பொழியட்டும். உலகிலேயே உன்னதம் மிக்க அழகு இவைகளிடம் மிளிர மனச்செழுமை மதர்த்துக் கொழிக்க இவைகளின் ஒவ்வொரு மொக்கையும் உனது பூந்தென்றலால் புதுப்பித்துக் கொண்டே இரு. இவைகளின் இந்த நம்பிக்கை ததும்பும் இமைகளின் எதிர்காலத்தை, வெளிச்சங்களிலேயே மின்ன வை. ஏன் என்றால் இவைகள் உனது ரோஜாக்கள். Q