பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 91 தோண்டா ஊற்றுகள்; தவழாக் காற்று; தோற்கா வெற்றிகள் நாளையே அன்றோ? ஆண்டவன் தோட்டமும் நாளையே ஆகும் - ! ஆயிரம் கனவின் அன்னையும் நாளையே! ஊமை யாழினில் நாளைக் கேனும் ஒருபுதுப் பாடல் எழுந்து முழங்குக! ஆமை நடையில் நாளைக் கேனும் அரிமா நடையின் ஆவேசம் ஏறுக! முக்காடு கிழிப்போம் படுக்கையைச் சுருட்டுவோம்! முளைத்தெழும் ஆயிரம் சூரியன்களை எல்லாம் எக்காளம் ஊதியே எதிர்கொள எழுவோம்! இனிய நாளை நாளைகளே வருக! C -