பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



14


போடப்பட்ட காலைத் தவிர மற்ற அவயவங்கள் அசைந்தன. இதைக்கண்டபோது மாமாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அவர் முகத்தில் பிரதிபலித்தது. அவர் முரளியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் கண் திறந்து தன்னைப் பார்ப்பதையும் பேசுவதையும் ஆவலுடன் காணத் துடித்துக் கொண்டிருந்தார். நர்சும் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.

முரளி மெதுவாகக் கண்களைத் திறந்த போது மாமா லேசாகச் சிரித்தார். அவரது சிரித்த முகம் முரளிக்கு ஆறுதலாக இருந்தது.

தன் காலில் ஒன்றை அசைக்க முடியாமலிருப்பதை விரைவிலேயே உணர்ந்தான். தன் கையைக் கொண்டு தடவிப் பார்த்தபோது கட்டுப் போடப்பட்டிருந்ததை அறிந்தான். அவன் கண்கள் நீரைச் சொறிந்தன. துக்கத்தில் அவன் தொண்டை அடைத்துக் கொண்டது. அவனால் பேச முடியவில்லை. அவன் நிலையைக் குறிப்பாக உணர்ந்த அவன் மாமா மெதுவாக அவன் தலையைக் கோதிவிட்டார். கனிவோடு நோக்கி அன்பாகப் பேசினார்.

“முரளி! நீ பயப்படுவதுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. லேசான எலும்பு முறிவு தான், கட்டுப்போட்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாமே சரியாகிவிடும். தெம்