பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19



முதல் உழவன் பொறுமையாக நிலத்தை உழுதான். தான் செய்யும் காரியத்தில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் கொண்டிருந்தான். அவ்வப்போது தன் ஏரை நிறுத்தி மாடுகளுக்கு ஒய்வு கொடுத்தான். அன்போடு தட்டிக் கொடுத்து அவைகளை ஆசுவாசப்படுத்தினான் அவைகளும் உற்சாகத்துடன் நிலத்தை உழுதன.

அதே சமயம் அடுத்த வயலை உழுது கொண்டிருந்த உழவன் அவசரப்பட்டான். விரைந்து நிலத்தை உழுது முடிக்கவேண்டும் என்பதற்காக ஏர்மாடுகளை அடித்து விரட்டினான். அவை ஒடி ஒடிக் களைத்தன. வெயிலின் கொடுமையும் எசமானின் அடியும் மாடு களை வேகமாகத் தொடர்ந்து நடக்க விடவில்லை. அவனுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. தன் நரம்புகள் புடைக்க மேழியைப் பிடித்து அழுத்தி உழுதான். மாடுகள் களைப்புடன் தொடர்ந்து நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டன. அவைகளை அடி அடி என்று அடித்துப் பார்த்தான். அம்மாடுகள் எழுந்து நடப்பதாகத் தெரியவில்லை. அடுத்தவன் வயலைப் பார்த்தான். அவன் மாடுகள் முறையாக உழுது கொண்டிருந்தன. அதிக நிலப்பரப்பை உழுது முடித்திருந்தன. அந்த மாடுகளைப்போல் தனக்கு வாய்க்கவில்லையே என ஏங்கினான்; மனம் புழுங்கினான்; அவன்