பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25


வேலையாட்கள் கழிக் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு செல்வதை செந்தலையரின் வேலையாட்களில் ஒருவன் பார்த்தான். வெட்டிக் கட்டப்பட்டிருந்த கழிக் கட்டுகளைப் பார்த்த போது அவனுக்கு ஏதோ ஒரு வித அச்ச உணர்ச்சி ஏற்பட்டது. குறையறிவு கொண்ட அவன் அதைப்பற்றி மேலும் மேலும் சிந்திக்கும் போது அவனுக்கு ஏதேதோ விபரீத எண்ணமெல்லாம் உண்டாகியது.

அவன் வேகமாகத் தன் எஜமானனாகிய செந்தலையர் வீட்டை அடைந்தான். தன் அச்ச உணர்வையும் விபரீத எண்ணத்தையும் வெளிப் படுத்தினான். கருந்தலையர் ஆட்கள் நம்மைத் தாக்குவதற்காகத் தங்கள் காடுகளில் உள்ள மரங்களையெல்லாம் இரகசியமாக வெட்டி கழிகளாக்கிச் சேகரித்து வைக்கிறார்கள். இதைத் தன் கண்ணால் பார்த்ததாகவும் கூறினான். சுற்றியிருந்தவர்களும் இது உண்மையாக இருக்கலாம் என்றும், தங்களுக்கும் இப்படி ஒரு சந்தேகம் கொஞ்ச நாளாக உண்டு என்றும் ஒத்துப்பாடி தூபமிட்டார்கள்.

தன் வேலையாளும் தன்னைச் சுற்றியுள்ள பலரும் கருந்தலையர் தாக்குவதற்கு தயாராகி வருகிறார் என்ற கருத்தை அனைவரும் ஒரே மாதிரி சொன்னதால், செந்தலையரால் அதை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவர்