பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ல் இளையவன் இலங்கைச் செல்வத்தை அவர் இருக்கும்பொழுதே பெற்றுக்கொள்ளவா சொன்னார்? அது சரி; இப்பொழுதாவது உன் தந்தையார் உண்மையை அறிந்து இராகவரைச் சரணம் அடைவாரா? இந் : என் தந்தையார் தாம் செய்தது தவறு என்று உணர்வது. இந் ஒரு விஷயம்; இராகவரைச் சரணமடைவது வேறு விஷயம். அவர் இராகவரைச் சரணமடைந்து இலங்கைச் செல்வத்தைப் பெற வேண்டுவ தில்லையே? - “கந்தனார் தந்தை யாரைக் கயிலையோடு ஒருகைக் கொண்ட எந்தையார் அரசு செய்வது இப்பெரும் பலங்கொண்டு அன்று." போனது போகட்டும்! மைந்த, அறத்தை மறம் வெல்லாது. இராவணர் இறந்துதான் போக வேண்டும் என்று முடிவு செய்தால், நான் என்ன செய்ய முடியும்? - ஏன்? நன்றாக முடியும்! சுத்த வீரராகிய நீர் பகைவருடன் சேர்ந்துகொண்டு இராவணர் முடிவை விரைவில் வரவழைக்கலாம். இராவணர் இப் போர்க்களம் வரத்தான் போகிறார்; போர் நடைபெறத்தான் போகிறது. முடிவில், எழுதியேர் அணிந்த திண்தோள் இராவணன் இராமன் அம்பால் புழுதியே பாய லாகப் புரண்டநாள் புரண்டு மேல்வீழ்ந்து அழுதியோ! நீயுங் கூட - ஆர்த்தியோ! இவனை வாழ்த்தித்