இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் அடர்ந்த காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்தார். அவருக்கு உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக அந்தக் காட்டில் தீ வளர்த்து நெய் சொரிந்து யாகம் செய்யலானார். எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடையவராக அவர் இருந்ததால், காட்டில் உள்ளவிலங்குகள் அவருக்கு வேண்டிய பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்தன. யானைகள் யாகத்துக்கு வேண்டிய