இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் அரசனுடைய சபையில் பல பணக்காரர்கள் இருந்து எப்போதும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் உண்மையான அன்பு உடையவர்களா என்பதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று அரசன் நினைத்தான்.
ஒரு நாள் அவன் ஏழையைப் போல வேடம் பூண்டு கந்தைத் துணியைக் கட்டிக் கொண்டு தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டான். ஒரு செல்வருடைய வீட்டுக்குப் போய்,