பக்கம்:தேன் சிட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுகிறது. போரே கூடாது என்று வற்புறுத்திய அறிஞர்களின் நல்லுரைகளுக்கும் செவிடாய் விடுகிறது. மறுபடியும் பழைய பாதையிலே நடக்கத் தொடங்கிவிடுகிறது.புதிய புதிய அழிவுப் படை களை உண்டாக்கும் முயற்சியிலே முழுக் கவனத் தையும் செலுத்தத் தொடங்கிவிடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குப் பக்கத்திலே முதல் பிரிட் டிஷ் அணுகுண்டுச் சோதனை நடைபெற்றது. பேரச்சந்தரும் இடி முகக்கத்துடனே அது வெடித் ததையறிந்து பிரிட்டிஷ் பிரதமர் உள்ளங் குளிர்ந் தாராம். ஆனால் நமது நாட்டுப் பெரிய விஞ்ஞானி யாகிய ஸ்ர் சி. வி. ராமன் அதையறிந்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. "புத்தருடைய வழியைப் பின் பற்ற முயலும் எனக்கு இந்த அணுகுண்டு வெடி இன்பமூட்டவில்லை. இதனால் உலகுக்கு நன்மை ஏற் படாது" என்று அவர் வெளிப்படையாகக் கூறி விட்டார். "அணுகுண்டு ஆராய்ச்சியில் முனைந்திருக்கும் நாடுகளின் அடிப்படையான நோக்கம் எனக்குப் பிடிக்கவில்லை. அணுவாராய்ச்சி மானிட சாதியின் இன்பத்திற்குக் காரணமாக அமைந்தால் அதை நான் வரவேற்பேன்" என்று நமது பிரதமர் பண்டித நேரு தமது கருத்தை விளக்கியிருக்கிறார்.

இரண்டாம் முறையாக ஏற்பட்ட கொடியதோர் உலகப் போர் முடிவடைந்து சில ஆண்டுகளே ஆயின. அதில் அழிந்த நகரங்களெல்லாம் இன்னும் முழுமையாகச் சீரமைப்புப் பெறவில்லை. போரின் கொடுமைகளை நன்கு உணர்த்திக்கொண்டு இடிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/49&oldid=1148840" இலிருந்து மீள்விக்கப்பட்டது