இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
தேன் சிட்டு
கூடாது என்றாவது உறுதி செய்து கொண்டிருக்கிறாயா? அந்த எண்ணம் ஒன்றிருந்தாலே போதும். அது உண்டா? எண்ணிப் பார்” என்று மனச்சான்று மளமளவென்று பொழிந்தது. அதை எதிர்த்துப் போர் தொடுக்க அந்த வேளையிலே எனது உள்ளத்திற்குத் துணிச்சல் வரவில்லை. அது பெட்டிப் பாம்பைப்போல அடங்கிக்கொண்டது.
பல்லியை அடிக்க மறுபடியும் நான் முயலவில்லை. என்னுடைய குறைகளையும் தவறுகளையும் பற்றிய ஆராய்ச்சியில் அழுந்தினேன். இவ்வாறு என்னையே நான் எண்ணிப் பார்த்துக் கொள்வதற்குத் தூண்டு கோலாக இருந்த அந்தப் பல்லியை எனது குருவாகக் கூட மதிக்கலாம் என்ற உணர்ச்சி மெதுவாக மேலெழுந்தது.