பக்கம்:தேவநேயம் 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 தேவநேயம் கம்பிபோல் நீண்டிருப்பின் வளையும். கல்லை முட்டிய வேரும் கடினமான பொருளை முட்டிய ஆணியும் வளைதல் காண்க. வழிச் செல்வோன் தெருவடைத்த சுவரை முட்டித் திரும்புவதும் வேற்றிடம் சென்றவன் வினைமுற்றி மீள்வதும், அணிவகையில் வளைதலின் பாற்படும். வளைதல் என்பது, சாய்தல், கோணல், திருகல், வட்டம், சுற்றல், சூழ்தல், உருட்சி, சுழற்சி முதலிய பல கருத்துகளைத் தழுவும், கூடற் கருத்தினின்று பிறக்கும் மற்றொரு கருத்து துளைத்தற் கருத்தாகும். முட்டியபின் வளையாத வலிய பொருள், தான் முட்டியதைத் துளைத்தும் செல்லும், ஆணி சட்டத்தையும், வண்டு மரத்தையும், பூச்சி புத்தகத்தை யும் மாந்தன் மலையையும் துளைக்கலாம். துளைத்தல் என்பது, குழித்தல், தோண்டுதல், துளையிடுதல், புகுதல், துருவுதல் ஆகிய பல கருத்துக்களைத் தழுவும். துளைத்துப் புகுதலும், துளைக்குட் புகுதலும் எனப் புகுதல் இருவகைத்து. உயிரிகள் தத்தம் உறைவிடத்திற்குட்புகுதல் துளைக்குட் புகுத லாகும். ஒன்றைத் துருவிய பொருள் இறுதியில் வெளிப்படும். அது தோன்றல் அல்லது முன்வருதல் போன்றதாகும். அதன்பின் நிகழக் கூடியவை தோன்றல் முதல் துருவல் வரை கூறியுள்ள பல நிகழ்ச்சிகளே. இவை ஒரு பொருளின் காலமெல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே யிருக்குமாதலின் ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி முற்றுறும் எல்லை துருவற் கருத்தே. ஆகவே, தோன்றல் முதல் துருவல் வரையுள்ள கருத்துக்களெல்லாம் ஒரு சுழல் சக்கரமாதல் காண்க. ஒரு வேர் தோன்றல், முற்படல், முற்செலல், நெருங்கல், தொடுதல், கூடல், வளைதல், துளைத்தல் என்பவை, இயற்கை இயல்நெறி வகையில், ஒத்துச் செல்லும் அருமையில் மொழிப் படைப்பும், அம் மொழிப்படைப்பு இம்முறைப் பட்டது எனக் கண்டுரைத்த காட்சியும் கவினும், வியந்து பாராட்ட வைத்தல் இயல்பாம். இப்படிமான வளர்நிலை, உயிரியற்கை யா கலின் ஒரு மொழி என்றும் உயிரியக்க மாகத் திகழவேண்டின் என்றும் என்பது வெளிப்படச் செய்வதுமாம். பாவாணர் வேர்ச் சொற்கட்டுரைகள் என்னும் தொடர் கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வியில் எழுதிவந்தார். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/131&oldid=1431481" இலிருந்து மீள்விக்கப்பட்டது