பக்கம்:தேவநேயம் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர் பாவாணர் அரமகள் = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள். ஒநோ.அணங்கு = வருத்தும் பெண் தெய்வம், தேவமகள். அரம்பையர் = தேவமகளிர். அரம்பையர்ச் சேருவரன்றே (நைடத. நிலா. 13) அரளுதல் = அஞ்சுதல். அரள் - அரட்டு - அரட்டன் = துன்புறுத்துவோன், துன்புறுத்தும் குறுநில மன்னன். அரட்டமுக்கி = துன்புறுத்தும் குறுநில மன்னனை அடக்கும் செங்கோலரசன். அரற்றுதல் = துன்பத்திற் கதறுதல். அர் - அரி. அரிதல் = பொடியாய் நறுக்குதல் அல்லது சிறிய பொருளை அறுத்தல். அரிதாள் = கதிரறுத்த நெல்தாள். அரிவி - இருவி = அரிதாள். அரிவாள் = சிறிதாய் அறுக்கும் வாள்வகை. 193 அரிவாள்மணை = அரிவாள் பதித்த பலகை அல்லது கட்டை அரிவாள் முனைப்பூண்டு = அரிவாள் முனையிலுள்ள தேங்காய் திருகி போன்ற இலையுள்ள பூண்டு. அரித்தல் = 1. அரித்தொழுகுதல், 2. சிறிது சிறிதாய்க் கறையான் (சிதல்) போல் அறுத்தல். 3. தினவெடுத்தல், புல்லரித்தல், நுண்ணியதாய் வலித்தல். 4. வெட்டுதல். 5. அழித்தல். கோடரி = கிளையை வெட்டும் வாள். Skt. Kuthara. கோடரி-கோடாரி - கோடாலி அரி, அரிமா = பிறவுயிரினங்களை அழிக்கும் விலங்கு. கோளரி= கொல்லும் மடங்கல் (Lion) அரி - Skt. Hari. அரி = அறுக்கப்பட்டது, அறுக்கப்பட்ட சிறுதுண்டு, சிறியது, நுண்மை,மென்மை. அரியே ஐம்மை (தொல். உரி.58) அரிநெல்லி = சிறுநெல்லி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/210&oldid=1431710" இலிருந்து மீள்விக்கப்பட்டது