பக்கம்:தேவநேயம் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறுவாள் வகைகள் பாவாணர் 197 (5) வீச்சறுவாள். இது வீசிப் பகைவரைக் கொல்வதற்கு உதவுவது. இங்ஙனம் பல்வேறு அறுவாட்கள் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரவும், அவற்றுள் ஒன்றைக்கூட அறுவாள் எனக் குறியாது எல்லாவற்றையும் அரிவாள் என்றே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலி குறித்திருப்பது வருந்தத் தக்கது. (வே.க) இணைப்பு அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு, அரித்தல்' அர் என்னும் ஒலி தோன்ற, எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல், அர - அரா - அரவு - அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல்" நுண்ணிதாயொலித்தல், கா : "அரிக்குரற்பேடை", அரித்தல்' அறுத்தல், கா : அரிவாள்மணை (அரி) - (அரம்) - அரங்கு, அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை. ஆற்றிடைக்குறை. அரங்கு - அரங்கம். அரங்கு - அரக்கு - அரக்கன் = அழிப்பவன், அரித்தல் வெட்டுதல், கா : கோடரி (கோடு + அரி) = மரக் கிளையை வெட்டுங்கருவி. கோடரி - கோடாரி - கோடாலி. அரித்தல்' அராவுதல். அரி + அம் = அரம் - அரவு - அராவு. அரித்தல்' அராவுதல் போல உடம்பிலுண்டாகும் நமச்சல், அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல்' அரிப்பெடுக்கும்போது சொறிதல் போல, விரல்களால் ஒரு பொருளை வாரித் திரட்டல். அரிப்பது அரிசி. அரிசி போற் சிறிய பல் அரிசிப்பல், சிறிய நெல்லி அரிநெல்லி. அரி = நுண்மை , அழகு, அரித்தல்* அழித்தல். அரி = பகைவன், சிங்கம், அரசன், தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம். அரி = அழிப்பவன். அழிப்பது. கா : முராரி, ஜ்வரஹரி (வ.) அரி யரி (வ.). அரி - அம் = அரம் = அழிவு. துன்ப ம்; E. Ger. harw. அரம் - அரந்தை. அரி + அன் = அரன் = அழிப்பவன், தேவன், சிவன். இனி அரம் = சிவப்பு, அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன்முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற் காரணம். அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அரமகளிர் = தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராசுலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. “சூரர மகளிரோ டுற்ற சூளே” என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது. (அரம்) - (அரம்பு) - அரம்பை = தேவமகள் ரம்பா (வ.), அரன் - ஹரன் (வ.). அரி (பெண்பாற்பெயர்) = திருமால், அரி - ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை) அரோ அரா - அரோவரா - அரோகரா. அரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/214&oldid=1431784" இலிருந்து மீள்விக்கப்பட்டது