பக்கம்:தேவநேயம் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

206) தேவநேயம் அரசர் இல்லற வாழ்க்கை வர்க்கே யுரிமை பூணுங்குலப் பரத்தையராகவே யிருந்திருத்தல் வேண்டும். அரசனாற் காதலிக்கப்படும் பரத்தையரெல்லாம், அவனுரிமை யென அவன் பெற்றோராலேயே ஒதுக்கப்பட்டு இளமைமுதல் வளர்க்கப்பட்டவர் என்று, இறையனாரகப் பொருளுரை யாசிரியர் கூறுவர் (பக் 226-228), இனி, அரசன் வேட்டைக்கும் உலாவிற்கும் சென்றவிடத்து யாரேனும் ஓர் அழகிய அரசகன்னியைத் தனியிடத்துக் காணின், அவளைக் களவுமணம் புரிவதுமுண்டு. நெடுமுடிக்கிள்ளி நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளையைக் கடற்கரையிற் கண்டு களவுமணம் புரிந்ததாக, மணிமேகலை கூறும். இயலுமிட மெல்லாம் களவு கற்பாகத் தொடரும். அரசன் மணத்திற்கு இத்துணையென ஒரு வரம்பில்லாதிருந்தது. அரண்மனையில் மகளிர் உறைவதற்குத் தனியிடமுண்டு, அது உவளகம் எனப்படும். அதில் அரசனையும் இளவரசரையுந் தவிரப் பருவமடைந்த ஆடவர் வேறு யாரும் புகுவதில்லை . குறளருஞ் சிந்தரும் பெண்டிரும் சோனகப் பேடியரும் வாளேந்தி உவளகத்தைக் காக்குமாறு அமர்த்தப்பட்டிருந்தனர். கன்னியர் உறைவதற்குத் தனிமாடம் இருந்தது. அது கன்னிகைமாடம் எனப்பட்டது. அரசன் உவளகஞ் செல்லும்போதெல்லாம் மகளிர் பரிவாரமே உடன்செல்லும். தேவியருக்குத் தனித்தனி மாளிகை இருந்தது. அரசன் வேறொருத்தியைக் காதலித்தான் என்றோ வேறு காரணம்பற்றியோ, கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது, புலவர் பாணர் முதலியோர் வாயிலாய் அவள் ஊடலைத் தீர்ப்பது அரசன் வழக்கம். அரசனுக்கும் அரசிக்கும், அடிமையரும் தோழியரும் குற்றேவலரும் பரிவாரத்தாரும் மெய்காவலருமாக, பற்பல ஊழியர் இருந்தனர். அரசி செல்லுமிடமெல்லாம் பரிவார மகளிர் எண்மங்கல (அட்டமங்கலப் பொருள்களை ஏந்திச் செல்லுவது வழக்கம். நகைச்சுவை யுணர்ச்சிமிக்க அரசர், தம் சொந்த இன்பத்திற் கென்று ஒரு நகையாண்டியை அமர்த்திக்கொள்வது முண்டு, அவனுக்குக் கோமாளி அல்லது கோணங்கி என்று பெயர். அரண்மனை வேலைக்கென்று தனியாக, ஐவகைக் கம்மியரும், மயிர்வினைஞன் வண்ணான் செம்மான் முதலிய குடிமக்களும், பிறதொழிலாளரும், அமர்த்தப் பெற்றிருந்தனர். அவரை அரண்மனைத் தட்டான் அரண்மனை மயிர்வினைஞன் அரண்மனைக் குயவன் என அழைப்பது வழக்கம். அரண்மனைப் பொற்கொல்லன் சட்டையணிந்திருந்தான் என்று சிலப்பதிகாரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/223&oldid=1431793" இலிருந்து மீள்விக்கப்பட்டது