பக்கம்:தேவநேயம் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் முடிவு பாவாணர் 213 இடைக் காலத்தில், தாயப்போரால் புகார்ச்சோழரும் உறையூர்ச் சோழருமாகப் பிரிந்து கோக்கள் நிலையடைந்து, பின்பு அதுவுமின்றிப் பல்லவருக் கடங்கிய மன்னராகத் தாழ்ந்தனர். மன்னர் நிலையிலிருந்த பல்லவரோ, இதற்கு நேர்மாறாக, பேரரச நிலைக்குயர்ந்தனர். இந்நிலைமை பின்பு மாறி, சோழர் மீண்டும் வேந்தரும் மாவேந்தரு மாயினர். இங்ஙனம் அரசக் குலங்களிடை மாறிமாறி நேர்ந்த ஏற்றிறக்கம் பலப்பல. (ப.த.ஆ.) அரசர் முடிவு தமிழரசர் முடிவு தனிப்பட்டதும் குடிப்பட்டதும் என இருவகை. அரசர் தனிமுடிவு : தமிழரசர், போரில் இறத்தலையே, பெரும் பேறாகவும் விண்ணுலகம் புகும் வழியாகவுங் கொண்டிருந்தனர். அதனால், இயலும்போதெல்லாம் அவரும் சேனையுடன் போருக்குச் செல்லுவது வழக்கம். போரிலன்றி நோயாலும் மூப்பாலும் இறக்கும் அரசர் வாள்போழ்ந்தடக்கப் பெறுவர். அதன் இயல்பை , நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கனுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கல் என்னும் புறப்பாட்டுப் பகுதியால் (93:5-11) அறிக. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், வாள்போழ்ந் தடக்கல் விடப்பட்டது. போரிற் பெற்ற புறப்புண் நாணியும், புதல்வன் தன்னொடு பொரவருகை நாணியும், பிறவகையில் மானக்கேடு நேர்ந்த விடத்தும், உலகப்பற்றைத் துறந்தவிடத்தும், அரசர் ஊருக்கு வடக்கில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பர். அது வடக் கிருத்தல் எனப்படும். பகைவரால் சிறைப்பட்டிருந்து உண்ணா திறத்தலும் வடக்கிருத்தலின் பாற்படும். வாழ்நாளிறுதியில், அரசாட்சியை இளவரசனிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டிற்குச் சென்று தவஞ்செய்தல், ஒரோவோர் அரசன் மேற்கொண்ட செயலாகும். அரசர்க்குப் பிறப்பினும் இறப்பே சிறப்பாதலால், கொற்ற அடை மொழியில்லாத வரசரெல்லாம், அவர் இறந்த இடப்பெயரால் வேறுபடுத்திக் கூறப்பட்டனர். அரசரிறந்தபின், அவருடம்பைத் தாழியாற் கவித்தலும், தாழியாற் கவித்துப் புதைத்தலும், வெறுமனே புதைத்தலும், முற்கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/230&oldid=1431799" இலிருந்து மீள்விக்கப்பட்டது