பக்கம்:தேவநேயம் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசர் விழாக்கள் பாவாணர் 217 மண்ணுமங்கலமும் புறத்தோன் மண்ணுமங்கலமும் என இருவகை, மாற்றரசன் மதிலையழித்துக் கழுதையேரால் உழுது வெள்ளை வரகுங் கொள்ளுங் கவடியும் வித்தி, அமங்கலமாயின செய்த வெற்றிவேந்தன். அவற்றிற்குக் கழுவாயாக நீராடும் மங்கலம். 'மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம்' (தொல்.1037) எனப்படும். (2) பெருமங்கலம் : ஆண்டுதொறுங் கொண்டாடப் பெறும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டம் பெருமங்கலம் ஆகும். அது பெருநாள் எனவும்படும். அதில், அரசன் உயிர்களிடத்துக் காட்டும் அருட்கறிகுறியாகத் தூய வெள்ளணி யணிந்து, சிறைப் பட்டவரை விடுதலை செய்து, கொலையுஞ் செருவும் ஒழிந்து, இறைதவிர்தலும் தானஞ் செய்தலும் பிறவும் மேற்கொள்வது வழக்கம். (3) வெற்றி விழா ; அரசன் போரில் பெற்ற வெற்றியைத் தன்னகரி லாயினும், மாற்றான் நகரிலாயினும், ஈரிடத்துமாயினும், கொண்டாடுவது வெற்றிவிழாவாகும். இதையொட்டி, அம்பலம் பொன்வேய்தல் திருவீதியமைத்தல் முதலிய திருப்பணிகளும், துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம். (4) மகப்பேற்று விழா : அரசனுக்குப் பிள்ளை பிறந்தபோது கொண்டாடப்படும் விழா மகப்பேற்று விழாவாகும். பெண் மகப்பேற்றினும் ஆண் மகப்பேறும், ஆண் மகப்பேற்றிலும் பட்டத்திற்குரிய முதன் மகற்பேறும், சிறப்பாகக் கொண்டாடப் பெறும். (5) அரங்கேற்று விழா : முத்தமிழும் ஓரிரு தமிழும் பற்றி நூலியற்றிய ஆசிரியர், அரங்கேற்றியதைக் கொண்டாடும் விழா அரங்கேற்று விழாவாகும். அரங்கேறிய புலவரை வெண்பட்டணிவித்து யானை மேலேற்றி நகர்வலம் வருவித்து, அவருக்குச் சிறந்த பரிசும் சின்னமும் முற்றூட்டும் அளிப்பது அரசர் வழக்கம். (6) நடுகல் விழா : போரில்பட்ட சிறந்த மறவர்க்குக் கல்நடும் விழா நடுகல் விழாவாகும். (7) பத்தினி விழா : சிறந்த பத்தினிப் பெண்ணுக்கு, அவள் இறந்த பின் கல் அல்லது சிலை நாட்டும் விழா பத்தினி விழாவாகும். இனி, சிறப்பாவன : பஃறுளி நெடியோன் எடுத்த முந்நீர் விழாவும், முசுகுந்தனும் நெடுமுடிக்கிள்ளிவரைப்பட்ட அவன் வழியினரும் கொண்டாடிய இந்திர விழாவும், முதலாம் இராசராசன் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/234&oldid=1431803" இலிருந்து மீள்விக்கப்பட்டது