பக்கம்:தேவநேயம் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

224 தேவநேயம் அரசிய லுறுப்புகள் அளவைக் கொள்ளின், தெற்கே அமிழ்ந்துபோன பாண்டிநாட்டு நிலம் 1100 கல் தொலைவிற்குக் குறையாததாகும். அந்நிலையில், பஃறுளியாறு சாவகத்தீவிற்கு நேர்மேற்காயமையும். "அக்காலத்து அவர்தாட்டுத் தென்பாலிமுகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கு மிடையே. எழுநூற்றுக் காவதவாறும்; இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை தாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ் குறும்பனைநாடும், என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்; குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும் காடும், நதியும், பதியும்; தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்,” என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால் (சிலப்பதிகாரம் (சாமிநாதையர் பதிப்பு), பக்கம் 230) அமிழ்ந்து போன பாண்டிநாட்டுப்பகுதி ஐம்பத்தொன்றிற்குக் குறையாத நாடுகளைக் கொண்டிருந்ததென்பதும், அவற்றுள் தென்கோடி யிலிருந்த தென்பாலிமுகம் பஃறுளியாற்றிற்குத் தெற்கிலிருந்த தென்பதும், அறியப்படும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுக் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11: 19-22) என்று இளங்கோவடிகள் கூறியிருப்பதால், பஃறுளியாறு கங்கைபோலும் பேரியாறு என்றும், குமரிக்கோடு பனிமலைக் கடுத்த பெருமலை என்றும், ஊகிக்கலாம். இடைச்சங்கக் காலத்தில், குமரியாற்றிற்குத் தெற்குப்பட்ட பாண்டிநாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கியபின் தமிழகப் பேரியாறாயிருந்தது குமரியாறே. தெனாஅ துருகெழு குமரி (புறம். 6) என்று காரிகிழாரும், குமரியம் பெருந்துறை புறம். 67) என்று பிசிராந்தையாரும் பாடியிருத்தல் காண்க, கடைச்சங்கக் காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியுங் குமரியும் மூழ்கிய பின்னரே, தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்திற் சிறந்து, சோழநாடு புனல் நாடு எனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/241&oldid=1431810" இலிருந்து மீள்விக்கப்பட்டது