பக்கம்:தேவநேயம் 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசிய லுறுப்புகள் பாவாணர் 225 கடைச்சங்கக் காலத்திலேயே, சேரநாடும் சோழநாடும் இவ்விரு பாகங்களாகப் பிரிந்திருந்தன. சேரநாட்டில், குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்கிலுள்ளது கடன்மலைநாடு என்றும், கிழக்கிலுள்ளது கொங்குநாடு என்றும், பெயர் பெற்றிருந்தன. கடன் மலைநாட்டின் வடபாகம், குட்டம் குடம் துளுவம் கொங் கணம் என்னும் பல பகுதிகளைக் கொண்டிருந்தது. கொங்குநாடு, குடகொங்கு (மேல்மண்டலம்), குணகொங்கு (கீழ்மண்டலம்) என இருபாகமாகப் பிரிந்து, அவற்றுள் குடகொங்கு, மீண்டும் குடகு, கருநாடு, கங்கநாடு, கட்டியநாடு முதலிய பலநாடுகளாகப் பிரிந்து போயிற்று. அவற்றுள் குடகையாண்ட கோசர் கொங் கிளங்கோசர் எனப்பட்டனர். கங்கநாட்டையாண்ட கங்கர் தம்மைக் கொங்குநாட்டரசர் (கொங்குதேசராஜாக்கள்) என்று கூறிக்கொண்டனர். அக்காலத்துக் கட்டியநாடு தமிழக வட வெல்லையா யிருந்ததென்பது. குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழி பெயர் தேஎத்த ராயினும் (11) என்னுங் குறுந்தொகைச் செய்யுளால் அறியலாகும். குணகொங் கின் தென்பாகம் பூழிதாடு எனப் பிரிந்திருந்தது. அது பொதினி என்னும் பழனிமலையையும் உட்கொண்டிருந்தது. பழனிமலை சேரநாட்டைச் சேர்ந்தது என்பது, சேரர் கொங்குவை காவூர் நன்னாடு என்னும் அருணகிரிநாதர் கூற்றாலும், “வடக்குத்திசை பழனி” என்னும் கம்பர் கூற்றாலும் அறியலாகும். குடகொங்கு பல நாடுகளாய்ப் பிரிந்து போனபின், கொங்கு நாடு எனச் சிறப்பாக அழைக்கப்பெற்றது, கருவூரைத் தலைநகராகக் கொண்டிருந்த குணகொங்கே, அதனின்றும் பூழிநாடு பிரிந்த பின், கொங்கு நாடென எஞ்சியிருந்தது கோவை சேல மாவட்டங்கள் கூடிய பகுதியேயாகும். இங்ஙனம் கடன்மலை நாடும் கொங்குநாடும் பலபல பகுதிகளாகப் பிரிந்துபோயினும், அவையாவும் செங்குட்டுவன் போன்ற சேரன் ஆட்சியில் அவனுக்கடங்கியே இருந்தன. அவற்றுள் குடநாடும் குட்ட நாடும் கொங்குநாடும் பூழிநாடும் நீண்ட காலமாகச் சேரநாட்டுப் பகுதிகளாகவே யிருந்து, சேரர் குடும்பத்தினரால் ஆளப்பட்டு வந்தன. சோழநாட்டின் வடபாகம் தொண்டைநாடு (வட சோழம்) என்றும், தென்பாகம் புனல்நாடு (தென்சோழம்) என்றும், பெயர் பெற்றிருந்தன. கடைச்சங்க காலத்திறுதியிலேயே, சேரநாட்டின் வடபாகத் திலுள்ள துளுவம் கொங்கணம் குடகு கருநாடகம் முதலிய நாடுகள், மொழிபெயர் தேயமாகத் திரியத் தொடங்கி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/242&oldid=1431811" இலிருந்து மீள்விக்கப்பட்டது