பக்கம்:தேவநேயம் 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2301 தேவநேயம் அரசியல் வினைஞர் பொக்கிசசாலை யதிகாரிகள்), கடை காப்பாளர் (அரண்மனை வாயிற் காவலர்), தகர மாந்தர் (நகரப்பெருமக்கள் அல்லது வணிகப் பெருமக்கள்), படைத்தலைவர், யானைமறவர், இவுளி மறவர் (குதிரைச் சேவகர்) என்னும் எட்டுக் கூட்டத்தாரின் பெருந் தொகுதி எண் பேராயமாகும். அரசனுடைய நன்மையையும் உடல் நலத்தையும் உண்மையாகக் கவனித்துப் பேணுதற்கு, உறுதிச் சுற்றம் என்றொரு குழு இருந்தது குறிக்கப்பட்ட படைத்தலைவர், நிமித்திகர், மருத்துவர், நட்பாளர், அந்தணர் ஆகிய ஐந்திறத்தார் சேர்ந்த குழு, உறுதிச் சுற்றமாகும். அரசனில்லாத அல்லது அவன் கடுநோய்ப்பட்ட சமையத்தில் அரசியலைக் கவனித்தற்கு, அரசியற்பொறுப்புச் சுற்றம் ஒன்று இருந்தது. அது ஆசான் (புரோகிதன்) பெருங்கணி (கணியர் தலைவன்), அறக்களத்தந்தணர் (நியாய சபையார்), காவிதி (வரியதிகாரிகள்), மந்திரக் கணக்கர் (அரசவாணை யெழுதுவோர்) ஆகிய ஐந்திறத்தாரைக் கொண்டது. கோவலனைக் கொல்வித்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் இறப்பிற்கும், அவன் மகன் வெற்றிவேற்செழியனின் முடிசூட்டிற்கும், இடைப்பட்ட காலத்தில், பாண்டிப் பெருநாட்டரசியலைக் கவனித்தது அரசியற் பொறுப்புச் சுற்றமே. தலை நகரிலுள்ள அத்தாணி மண்டபத்தில், அரசன் முன்னிலையில், சூழ்வினை யமைச்சரும், படைத்தலைவரும், பல்வேறு ஆள்வினைத் திணைக்களத் தலைவரும், பெருங்கணியும், ஆசானும், பல்வகைப் புலவரும் பிறரும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான கூட்டத்திற்கு அரசவை என்று பெயர். அது இருக்குமிடம் அவைக்களம் எனப்படும். அரசவையில் அரசனுக்கடுத்தபடியாக முதலமைச்சனே தலைமையாயிருப்பான். அரசவை, அதிலுள்ளாரின் தன்மையும் அறிவும் பற்றி, நல்லவை தீயவை நிறையவை குறையவை என நால்வகையாக வகுத்துக் கூறப்படும். அறிவு ஒழுக்கம் முதலியவற்றிற் சிறந்து, நடுநிலைமை யாகப் பேசுவோர் கூடிய அவை நல்லவை; அதற்கு எதிரானது தீயவை; எல்லாப் பொருள்களையும் அறிந்து, எதிர்காலச் செய்திகளை முன்னமாக அறிவிக்கும் பேரறிஞர் கூடிய அவை நிறையவை; அதற்கு எதிரானது குறையவை. அரசன் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளும் ஆணைகளை நேரிற் கேட்பவனுக்குத் திருவாய்க் கேள்வி என்றும், அத் திருவாய்க் கேள்வி அறிவிக்க அறிந்து அரசவாணையை எழுதுவோர்க்குத் திருமந்திர வோலை என்றும். அவ்வெழுத்தாளர் தலைவனுக்குத் திருமந்திர வோலை நாயகம் என்றும் பெயர். அரசவாணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/247&oldid=1431816" இலிருந்து மீள்விக்கப்பட்டது