இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவாணர்
9
07.02.1902 | சங்கரநயினார் கோயிலில் ஞானமுத்தர் பரிபூரணத் தம்மையார் ஆகிய பெற்றோர்க்குப் பத்தாம் மகவாகப் பிறந்தார். |
1906 | தந்தையார் இயற்கை எய்துதல்; அடுத்தே அன்னையாரும் இயற்கை எய்துதல், சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தொடக்கக் கல்வி பயிலல். |
1912 | வடார்க்காடு மாவட்டம் ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில் பயிலல். |
1916 | பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழிய (C.M.S) உயர்நிலைப்பள்ளி. |
1919 | முறம்பில் ஆசிரியப் பணி; ஆறாம் வகுப்பு ஆசிரியர் (ஈராண்டு) |
1921 | ஆம்பூர் பள்ளியில் தமிழாசிரியர் (மூன்றாண்டு) |
1924 | மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வில் தாம் ஒருவராக வெற்றி பெறல், "ஞா.தேவநேசக் கவிவாணன், மிஷன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர், வடார்க்காடு ஜில்லா" என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22) |
1924 | சென்னை, பிரம்பூர் கலவல கண்ணன் உயர்நிலைப் பள்ளி |
1925 | சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப் பள்ளி |
1926 | சென்னை, தாம்பரம் கிறித்தவ உயர்நிலைப் பள்ளி (மூன்றாண்டு) திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித் தமிழ்ப் புலவர் தேர்ச்சி. (செந்.செல். 4:336) பெறல், வித்துவான், கீ.க, தேர்வு (B.O.L) தேர்ச்சி எசுந்தர் அம்மையார் திருமணம். ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்; தத்தாகத் தரப்படுதல். |