பக்கம்:தேவநேயம் 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அளவைகள் பாவாணர் 267 பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது, நகரங்களில் அது நகரக்கல் எனப்பட்டது. பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல் என்னும் நிறைகல் இருந்தது. மிகப் பேரளவான பொன் துலாம் கணக்காக நிறுக்கப்பெற்றது. (3) முகத்தலளவை: முகந்தளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும் சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்த லௗவை நெல்லிலக்கம் எனப்படும். கீழ்வருவது முகத்தலளவை : 2 செவிடு பிடி 5 செவிடு 1 ஆழாக்கு 2 ஆழாக்கு 1 உழக்கு 2 உழக்கு 2 உரி 1 நாழி 8 நாழி 1 குறுணி (மரக்கால்) 2 குறுணி 1 பதக்கு 2 பதக்கு 1 தூணி (காடி 3 தூணி 1 கலம் 400 குறுணி 1 கரிசை (பறை) அரச முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரையும், கோயிற் பண்டாரத்தில் தெய்வப் பெயரையும் தாங்கியிருந்தன. சோழாந்தகன் நாழி அருண்மொழித்தேவன் மரக்கால் என்பன அரசன் பெயரையும், ஆடவல்லான் மரக்கால் செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால் என்பன தெய்வப் பெயரையும், தாங்கியவை யாகும். இனி, ஒவ்வொரு நாட்டிற்கும் சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு, பாண்டி நாட்டில் கோட்டை (2! மரக்கால்) என்பதும் வடசோழநாட்டில் புட்டி (40 மரக்கால்) என்பதும் பெருமுகத்த லௗவாம். | (4) நீட்டலளவை : நீட்டலளவை, வழியளவையும் நிலவளவையும் என இருவகைப்படும். இவற்றுள் நிலவளவை குழிக் கணக்கு எனப்படும். வழியளவை வருமாறு : 8 தோரை (நெல்) - 1 விரல் 12 விரல் 1 சாண் 2 சாண் 1 முழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/284&oldid=1432001" இலிருந்து மீள்விக்கப்பட்டது