பக்கம்:தேவநேயம் 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறுதொழிலோர் பாவாணர் 279 தால் வகுப்பாராக வகுத்ததே, அந்தணர். அரசர். வணிகர், வேளாளர் என்னும் தமிழ்ப் பாகுபாடாம். இல்லறத்தாரான தமிழ்ப் பார்ப்பாரும், அக்காலத்தில் அருளாளராய் அந்தணர் என்னும் பெயருக்குத் தகுதியுடையாராயிருந்தனர். கி.மு.7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியர், தம் காலத்தி லேயே ஆரியம் வேரூன்றியதைக் கண்டதனால், துறவியர் போல் வீடு வாசலின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த பிராமணரையும் அந்தணராகக் கொண்டு. தூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல். பொருள் மர. 71 என்று கூறினாராயினும், வணிகர்க்கு வாணிகமும் வேளாளர்க்கு உழவுமே தனிச்சிறப்புத் தொழில் என்னும் உண்மையை, வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல். பொருள் மர. 79) வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது இல்லென மொழிய பிறவகை நிகழ்ச்சி (தொல். பொருள் மர. 82 என்னும் நூற்பாக்களாற் குறித்தார். இங்ஙனமிருந்தும், நிகண்டுகள், அந்தணர் அரசர் முதலிய நால் வகுப்பான தமிழ்ப் பாகுபாட்டை , ஆரியர் (பிராமணர்), பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் எனத் தந்நலத்திற்கேற்ப முறையே படிமுறைத் தாழ்வுற்ற நிலையான நாற்பெரும் பிறவிக் குலப் பாகுபாடாகத் திரித்து. பிராமணர்க்கு ஆரிய மறையான வேதமோது தலும் வேள்வி செய்வித்தலும், சத்திரியர்க்குப் போர் புரிதலும் வேள்வி செய்தலும், வைசியர்க்கு வாணிகமும் உழவும் செய்தலும், சூத்திரர்க்குக் கைத்தொழிலும் மேல் மூவகுப் பார்க்கும் ஏவல் செய்தலும், தனிச்சிறப்புத் தொழிலென வகுத்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றியே, ஆரியரல்லாதவரும் பார்க்கும் அவ்வாறு தொழில் வகுத்துக் கூறியுள்ளமை, தமிழ் மரபிற்கும் தமிழர் உயர்வுக்கும் எள்ளளவும் ஏற்காத இழி நிலையும் கடைப்பட்ட அடிமைத்தனமுமே காட்டும். 8. ஆரியத்தை எதிர்ப்பதே திருக்குறள் நோக்கம் திருவள்ளுவர் அறம்பொருளின்பம் என்னும் முப்பால்பற்றி இயற்றியருளிய அற நூல் வையகம் முழுவதற்கும் பயன்படும் வாயுறை வாழ்த்தே யாயினும், தமிழரை ஆரிய அடிமைத்தனத் தினின்று விடுவிப்பதே அதன் அடிப்படை நோக்கமென்பது. அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (30)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/296&oldid=1432014" இலிருந்து மீள்விக்கப்பட்டது