பக்கம்:தேவநேயம் 1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் அறுதொழிலோர் அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். (46) ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (133) மறப்பினு மோத்துக் கொளவாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (144) அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259) ஈன்றாள் பசிகாண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (666) பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (972) சுழன்று மேர்ப் பின்ன துலக மதனால் உழந்து முழவே தலை. (1031 உழுவா ருலகத்தார்க் காணிய : தாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து, 1035) இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். (1033) என்னுங் குறள்களாலும், இவை போன்ற பிறவற்றாலும் அறியப் படும். இங்ஙனம் ஆரியத்தைக் குறிப்பாகவும் வெளிப்படை யாகவுங் கண்டிப்பவரும், தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (67) என்று கல்வியை எல்லா மக்கட்கும் பொதுவாகக் கூறியவரும். விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (410) என்று வேதத்தைக் குறியாது வேறு விழுமிய நூல்களையே குறித்த வருமான திருவள்ளுவர். பிராமணரை ஒருபோதும் போற்றா ரெனத் தெற்றெனத் தெரிந்து கொள்க. இங்ஙனம் அவர் தமிழர்க்கு விழிப்புணர்த்தி ஈராயிரம் ஆண்டிற்கு மேலாகியும், இன்றும் அவர் கருத்தறியாது. பரிமேலழகர் உரையை மறுக்கப் பாரில் எவருள்ளார் என்று தருக்கும் தமிழ்ப் புலவரும் உளர். அவர் "பேதைக் குரைத்தாலும் தோன்றா துணர்வு என்னும் பழமொழிக் கூற்றை (93) விளக்கப் பிறந்தவரே யாவர். இனி, அறுதொழிலோர் யாரெனின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/297&oldid=1432015" இலிருந்து மீள்விக்கப்பட்டது