பக்கம்:தேவநேயம் 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

298 தேவநேயம் ஆட்சிமுறை உத்தமச்சோழன் காலத்தில், தொண்டை நாட்டைச் சேர்ந்த சிற்றியாற்றூரில் பிரமதேயமாகக் கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றிய அரச ஆணையோலையில், அடிகள் நக்கன் என்னும் பல்வத்திரி கிழவன் (பவ்வத்திரி யூர்த்தலைவன்) உடன் கூட்டத்ததி காரிகளுடன் சேர்ந்து கையெழுத்திட்டதாலும், ஊர்த்தலைவனு டைய ஊழியத்திற்காக அம்பலமானியம் என்னும் இறையிலி நிலம் விடப்பட்டிருந்ததினாலும், சிற்றூர்த் தலைவன் பதவி அரசனால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்ததை அறியலாம். சிற்றூர்த் தலைவனுக்கு ஊராட்சியில் உதவுவதற்கு, சிலவூர்களில், துணைத்தலைவனொருவனும் கருமமாற்றுவோனொருவனும் சேவகனொருவனுமாக மூவர் இருந்தனர். ஒவ்வோர் ஊர்க்கும், நீர்ப்பாய்ச்சி யொருவனும் குடிக்காவல் என்னும் ஊர்காவலன் ஒருவனும் இருந்தனர். ஊர்வழக்குக்களைத் தீர்ப்பதற்கும் ஊரில் சட்டதிட்டங்களை ஏற்படுத்தற்கும் ஊர்த்தலைவன் கூட்டும் கூட்டம், ஊர்மண்ட பத்திலாவது, ஒரு மரத்தடியிலாவது, வெள்ளிடையிலாவது நடைபெறும். ஆவணக்களரியார் செயல்: ஆள்நில ஊர்தொறும் ஆவணக் களரியிருந்தது. ஒரு நிலத்தை விற்பவனும் கொள்பவனும், அல்லது அடைமானம் வைப்பவனும் வாங்குபவனும், அல்லது குத்தகைக்கு விடுபவனும் எடுப்பவனும், தம்முள் இசைந்து எழுதிய ஆவணத்தை ஆவணக்களரிக்கெடுத்துக் கொண்டு போய், களரியார் முன் தாம் இருவரும் இசைந்து கொண்டதாக உறுதிமொழி கூறியபின் ஆவணம் களரியாரால் காப்பிடப் பெறும். காப்பிடுதல் என்பது அரசு முத்திரையிட்டுப் பதிவுசெய்தல், ஆவணத்திற்கு, ஏடு, ஓலை, கரணம், கலம், சீட்டு, செய்கை, தீட்டு, நறுக்கு, பட்டிகை, பட்டயம், முறி முதலிய பிற சொற்களும், அவ்வவ் வினைக்கும் எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப வழங்கின. ஆயினும், அவற்றையெல்லாம் தழுவுவதும், அதிகார எழுத்துச் சான்றைச் சிறப்பாகக் குறிப்பதும், ஆவணம் என்னும் சொல்லே பத்திரம் பிரமாணம் என்னும் வடசொல் வழக்கு பிற்காலத்ததாகும். ஓலை சீட்டு நறுக்கு முறி என்னும் சொற்கள் பனையோலையில் எழுதப்பட்டவற்றையும், பட்டிகை பட்டம் என்பன செப்பேட்டில் எழுதப்பட்டவற்றையும், பிற இரண்டையும், குறிக்கும். நிலவிற்பனை யாவணத்திற்கு விலையாவணம், விலையோலை, விலைத்தீட்டு என்னும் பெயர்களும்: ஆள்விற்பனை யாவணத்திற்கு ஆள்விலைத்திட்டு, ஆள்விலைப்பிரமாண இசைவுத்தீட்டு, அடிமையோலை என்னும் பெயர்களும்; வழங்கின. அடைமான ஆவணம், ஒற்றிக்கலம் ஒற்றிக்கரணம் ஒற்றி நறுக்கு அடையோலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/315&oldid=1432034" இலிருந்து மீள்விக்கப்பட்டது