பக்கம்:தேவநேயம் 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்சி முறை பாவாணர் 299 என்றும்; அடைமானம் வாங்குபவன் எழுதிக்கொடுத்த ஓலை, எதிரடையோலை யென்றும்; பெயர் பெற்றிருந்தன. நுகர்ச்சியோடு கூடிய ஒற்றிக்கு இறங்கொற்றி அல்லது அடைப்பு (Usufructuary mortgage) என்றும் நிலையான ஒற்றிக்கு உறாவொற்றி (Irredeemable mortgage) என்றும் பெயர். தீட்டுக்காரனால் (Notary) எழுதப்படாத அல்லது பதிவு செய்யப்படாத ஒற்றிக்கலம் கையொற்றி எனப்பட்டது. குத்தகைத் தவணை முடிந்தவுடன் அதன் தீர்வுபற்றி எழுதப்படுவதற்கு அறுதிமுறி (Cancelled lease-deed) என்றும், ஒரு பொருளின் உரிமை குறிப்பிட்ட ஒருவர்க் கன்றிப் பிறருக்கில்லையென்று குறிக்கும் எழுத்தீட்டிற்கு விடுதீட்டு அல்லது தீர்வுமுறி (Release-deed) என்றும், பெயர். ஒருவர் ஒன்றற் குடம்பட்டு எழுதித்தரும் சீட்டு, இசைவுத் தீட்டு இசையோலை ஒப்புமுறி என்னுஞ் சொற்களுள் ஒன்றாற் குறிக்கப்பெற்றது. ஒருவர் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாக எழுதித்தரும், சீட்டிற்குப் பற்றுமுறி (Receipt) என்று பெயர். நிலவாரச் சாகுபடி யாவணம் (Deed of lease for cultivation) காணிப் பிடிபாடு எனப்பட்ட து விலையாவணம் ஒழிந்த பிறவற்றுள் பெரும்பாலன, இன்றியமை யாது ஆவணக்களரியிற் பதிவுசெய்யப்படவேண்டுந் திறத்தனவல்ல. பொதுவகையான ஆவணங்கள் ஓலையிலும், சிறப்பானவை செப்பேட்டிலும், எழுதப்பெறும். ஊராருக்குத் தெரியவேண்டிய ஆவணமாயின், கல்லில் வெட்டப்பெறும். அறங்கூறவையத்தார் செயல் : நகரங்களிலிருந்த அறமன்றத்தார், வழக்காளி (plaintiff) எதிர் வழக்காளி (Defendant) ஆகிய இருவரின் சொல்லையும் பலமுறை கேட்டு, கரியும் (winess) சான்றும் (Evidence) இருப்பின் அவற்றைக் கொண்டும், அவையில்லாவிடின் நூலுத்தி பட்டறிவு (கருதியுக்தியனுபவம்) கொண்டும், நடுநிலை மையாய்த் தீர்த்து முறைசெய்து வந்தனர். இருவர்தம் சொல்லையும் எழுதரங் கேட்டே என்று அதிவீரராம பாண்டியனும். இருவர் சொல்வழக்கு நோக்கி யனுவதித் திரண்டுநோக்கி என்று பரஞ்சோதி முனிவரும், கூறியிருப்பதால், வழக்கை நன்றாய் அறிந்து கொள்ளற்கும், வழக்காளரின் மெய்ம்மை காண்டற்கும், மன்றத்தார் வழக்கைப் பலமுறை சொல்வித்தமை அறியப்படும். கரியுஞ் சான்றுமில்லாத வழக்குக்களில், பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பிடித்தல், பாம்புக் குடத்தில் கையிடுதல் முதலிய தெய்வச்சான்று வாயிலாகத் தம் மெய்ம்மையை நாட்டும்படி, வழக்காளரை மன்றத்தார் கேட்பது முண்டு. அத்தகைய சான்று பல வழக்குகளில் உண்மைக்கு மாறாயிருந்ததென்பது. 'பாழ்ந்தனிசு வேண்டிப் பாம்புக்குடம் பெற்றான்' என்னும் பழமொழியாலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/316&oldid=1432035" இலிருந்து மீள்விக்கப்பட்டது