பக்கம்:தேவநேயம் 1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

304 தேவநேயம் ஆய்தம் ஏனைய வேழும் தொல்காப்பியர் காலத்திலும் இருந்தமையாலும், தொல்காப்பியர்க்கும் நச்சினார்க்கினியர்க்கும் நன்னூலார் கொள்கை யிருந்ததில்லை யென்பது தெளிவாம். ஆய்தப் பெயரும் ஒலியும் தொல்காப்பியர் ஆய்தத்தைக் குறிக்கும்போதே முப்பாற்புள்ளி என அதற்கு மற்றுமொரு பெயர் கொடுத்தார். பிற்காலத் தாசிரியர் வேறுஞ் சில பெயரிட்டு வழங்கினர். “ஆய்தம் என்பது அஃகேனம், அஃகேனமெனினும் ஆய்த மெனினும் தனிநிலை யெனினும் புள்ளி யெனினும் ஒற்றெனினும் ஒக்கும், என்னை? அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே என்றார் மயேச்சுரர்” என்று காரிகையுரையாசிரியரான குணசா கரரும், "ஆய்தம் எனினும், அக்கேனம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும், என்னை ? அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே என்றார் அவிதயனார்” என்று யாப்பருங்கல விருத்திகாரரும் கூறுவது காண்க. அவிநய நூற்பாவில் அக்கேனமென்பது ஏட்டுப்பிழையா யிருத்தல் வேண்டும். பழைய திண்ணைப்பள்ளிப் பாடமுறையில் ஆய்தப்பெயர் அதன் ஒலி வடிவொட்டி அஃகன்னா என வழங்கிற்று. ஆய்தவொலி ஏனையிரு சார்பெழுத்துப் போன்றே. ஆய்தமும் ஒரு முதலெழுத்தின் திரிபென்பது, "இதற்கு (ஆய்தத்திற்கு) வடிவு கூறினார். ஏனை யொற்றுகள் போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன் றாகலின்,” என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும், சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப் படுத்த ஏனை மூன்றும் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி யொத்த காட்சியிற் றம்மியல் பியலும் பிறப்பியல், 19) என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், சார்பெழுத்து என்னும் பெயராலும், அறியப்படும். ஆயின், எவ்வெழுத்தின் திரிபெனின், ககரத்தின் திரிபாம் என்க. ஆய்தம் தொன்றுதொட்டு மெல்லிய ககரமாகவே ஒலிக்கப்பட்டு வருவதாலும், ஏனச் சாரியை பெற்றக்கால் அஃகேனம் எனக் ககரத்தோடியைந்தே வழங்குவதாலும், பண்டையேட்டரிச்சுவடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/321&oldid=1432041" இலிருந்து மீள்விக்கப்பட்டது