பக்கம்:தேவநேயம் 1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆங்கம் பாவாணர் 307 வெளிப்படுக்கப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால், தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்புப் பிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும்” என்றும், "ஒழிந்த ஆய்தந் தமக்குப் பொருந்தின நெஞ்சு வளியாற் பிறக்கும்” என்றும் உரைத்தனர் நச்சினார்க்கினியர். இந் நூற்பா முழுவதையும் ஒரே கூற்றாகக் கொண்டு, 'சில எழுத்துகளைச் சார்ந்துவரினல்லது தமக்கெனத் தனியியல் பில்லாதனவென ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட (குற்றியலு கரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமாகிய) மற்ற மூன்று எழுத்து களும், தத்தம் முதலெழுத்துகளின் பிறப்பொடு பொருந்தி அவற்றோ டொருபுடை யொத்த தோற்றத்தினவாய்த் தத்தம் சிறப்புத் தன்மையுடன் நடக்கும்' என்றுரைப்பதே பொருத்தமாம். "இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்றுவளியானும் பிறக்கு மென்பாரும் உளர்" என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆய்தச் சாரியை காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை புணரியல், 32) என்னும் எழுத்துச்சாரியை நூற்பாவில் ஆய்தவெழுத்திற்குரிய சாரியையை ஆசிரியர் கூறாவிடினும், "நேரத்தோன்றும் எனவே நேரத் தோன்றாதனவும் உளவாயின. அவை ஆனம், ஏனம், ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின என்று உரையாசிரியர் (நச்சினார்க்கினியர்) கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தொல்காப்பிய நூலில் கூறப்படாத சில இலக்கணங்கள் உரை யாசிரியராற் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் ஆய்தவெழுத்துச் சாரியையும் ஒன்று. இது உரையிற் கோடல் என்னும் உத்தி பற்றியது. ஆய்தச் சார்பு ஆய்தம், குறிலுக்கு முன்னும் வல்லின வுயிர்மெய்க்குப் பின்னுமாக அவ்விரண்டிற்குமிடையில் வருவதே இயல்பாம். குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே (மொழி மரபு. 50 என்றார் தொல்காப்பியனார். ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய் வலியதன் மேல்வந் தியலு மென்ப என்றார் கையனார். இவ் விதிக்கு, எஃகு கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது, இஃது, உஃது என நச்சினார்க்கினியரும், அஃகம், வெஃகா, எஃகு, கஃசு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/324&oldid=1432044" இலிருந்து மீள்விக்கப்பட்டது