பக்கம்:தேவநேயம் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் "சிறிது கற்றோர் பெருகி வாழ, பெரிது கற்றோர் சிறுகி வீழலை நிறுவுகிறார் (15), | அயலான் போலவே நம்மவனும் நமக்குக் கேடனாக இருத்தலை மூவகையர் ஏமாற்றலில் கூறுகிறார் (16) இத்தமிழகத்தில் இருந்துகொண்டே இதற்குக் கேடு செய்யும் இழிமையரைத் தமிழ்ப் பகைவராகச் சுட்டுகிறார் (17) இங்கே என்னென்ன வளவாய்ப்புகளைச் செய்தாலும் இந்தியொடு நாகரி எய்தின் நன்றோ என வினாப் பதிகமாக இசைப் பது தமிழ்கெட வரும் வளர்ச்சித் திட்டம் தீங்கு விளைப்பது என்பது. தமிழனுக்கு இணையில்லை உலகில் தாய்மொழி பேணாமைக்கு என்பது சுவையான முரண் (19), தமிழன் உடமை தமிழ் ஒன்றே (20) செந்தமிழே தமிழன் செல்வம் (21) எது தமிழ்? (22) தமிழன் குலம் 'தமிழன்' (23) தமிழ்ப்ப ற்று (24) தமிழைக் காட்டிக் கொடாமை (25) தமிழ்த் தொண்டர் படைச்செலவு (27) தமிழுக்கு தற்கால அண்மை (28) தமிழ்வெற்றி முரசு (29) தமிழ்வாழ்த்து (30) என்பனவெல்லாம் தமிழ்நேயரின் தமிழுள்ள வீறாம். "கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார் கல்லாத பேரே தமிழ்க் காவலராகி வென்றார்" என்பது எத்தகை வெப்பின் விளைவு என எண்ண வைக்கிறது (24) பெரியார் வாழ்த்து (13) சேலங்கல்லூரி முதல்வர் இராமசாமிக்கவுண்டர் (26) இரா.முத்துக்கிருட்டிணன் (33) என்பவை நன்றிப்பாக்கள் உலகத் தமிழ்க் கழகம் (31) பறம்புக்குடி (32) என்பவை அமைப்பும் விழாக்கோளும் பற்றியன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/33&oldid=1431214" இலிருந்து மீள்விக்கப்பட்டது