பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

15

நேரிட்ட பிரம் விலையைக் கவனியுங்கள். இவர் சிருஷ்டி கர்த்தர்; இவரைப் பூஜிக்க வேண்டும். அந்த பூஜைக் குப் பெயர்: பக்தி இதை ஒப்புக்கொள்வாரா ஒரு சொட்டு மானமும் ரோசமும் பகுத்தறிவும் உள்ளவர் கள்? பிரம புராணத்திலே எழுதப்பட்டிருக்கிறது மற்றோர். லீலை. கௌரிகல்யாணம் நடந்ததாம். அதனைக் காணச் சென்றாராம் பிரமன், கெளரியைக் கண்டார்; காமங் கொண்டதுதான் தாமதம், விளைவு வீறிட்டது. உடனே தோன்றினராம். வாலகில்லிய இருடிகள். எப்படி யிரமனின் பெருங்குணம்! பெண்களைக் கண்ட உடனே இப்பெருங்குணவானுக்கு தோன்றும் காமம்; அதன் விளைவு ஆகியவற்றைக் கூறிவிட்டு, இப்படிப் பட்டவரை ஏத்தி ஏத்தித்தொழுவோம் யாமே என்றும் கூறுகிறார்களே புராணத்தைப் பேசி, அக்கற்பனை களைப் பூஜிக்கும் மதவாதிகள். இவர்கள், எதை மதிக் கிறவர்களாகிறார்கள்? தெய்வத்தை? தீய செயல் புரி வோன் தெய்வமல்லவே! தீய செயலைச் செய்ததாகக் கதையும் கூறிவிட்டுப் பிறகு, அச்செயலின்னைத் தெய்வ மென்று கூறினால், மதி தேய்ந்தவர். தவிர மற்றையோர். ஏற்பரோ? ஊர்வசி அடிலைம். இலோக்கமை பாம் னாலும், பார்வதி கண்ணிலே பட்டாலும், கௌரியைக் கண்டாலும், மகளே எதிர்ப்பட்டாலும் இந்த மகானு பாவனுக்குக் காமவெறி பிடித்து விடுகிறது. இப்படிப் பட்ட காமி வெறிபிடித்தலையும் “கடவுள்கள்" யாருக்குத் தேவை என்று கேட்கிறோம்.