பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


$ 3. 'அம்மாடி!... 'பாருகுட்டி!' பார்வதி நிம்மதியாக முறுவல் பூத் தாள் - அனாதரட்சகா!' பார்வதிக்கு ராத்திரித் தூக்கம் கெட்டது ; அவளே கெடுத்துக் கொண்டாள் மனத்தின் உலைவுகள்-உளைச் சல்கள் அவளை உறங்க விட்டால் தானே ? அவள்தான் என்ன செய்வாள் ? கவலைகளும் சோதிப்புக்களும் ஒன்றி ரண்டோடு நின்றால்தானே : மனத்தின் பாதிப்பு உடம்பையும் தொற்றியது. விளைவு ; காய்ச்சல் அடித்தது ; அடித்துப் போட்ட பாங்கில் தன்நினைவு பறிபோய்க் கிடந்தாள் எட்டிப் பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ ஈ, காக்கை நாதி இல்லை. விடிந்தது. அவள் கண்களைக் கசக்கிக்கொண்டு தட்டுத் தடுமாறி யவளாக லட்சுமியைத் தேடு, தேடென்று தேடினாள். மாட்டுத் தொழுவத்தின் லட்சுமி போய், வருடங்கள் பல போய் விட்டன - இப்போது அவள் தேடியது தனலட்சுமியை - பைசா இல்லை ; கேவலம்; ஒரு பைசா கூட இருப்பில் இல்லை, அவள் முதல் தேதிதான் பணக்காரி ஆவாள் :- நெஞ்சை உறுத்தியது தங்கச் சங்கிலி! அவள் கைதான் அவளுக்கு உதவி. ராம்லால் சேட்டைத் தேடிப் புறப்பட்டாள். அப்படியே லேடி டாக்டரையும் சந்தித்தாக வேண்டும் ஆமாம் ; முன்பு அடகு வைத்த தங்கச் சங்கிலியின் பேரில் கொஞ்சம் பணம் கடன் கொடுத்தால்தான் நர்ஸிங் ஹோமில் வேலை ! சேட் நல்லவர் ; கொடுப்பார்!... வாசலில் மூலிகை சிக்கியது.