பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

国5 பார் வதி மூன்று தினங்கள் லீவு எடுத்துக் கொண் டாள் - அடிவயிற்றின் உபாதை தேவலாம், இப்போது ஒன்பது மணி ஆன கையோடு டம்பப்பையும் கையுமாக அவள் அலுவலகத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். ஆகவே, காலைக் கடன் காரியங்களைச் சுறுசுறுப்போடு செய்து முடிப்பதில் ஈடுபட்டாள், இடைஇடையே, சமூகத் தின் ஆரோக்கியத்தைப் பகல் வேஷம் போட்டுக் கெடுக்கும் விஷக்கிருமியான மாதங்கி அவளுக்குப் பூச்சாண்டி காட்டவும் தவறவில்லை. இவ்வளவு மோச மாகப் பேசப் பட்டு வருகின்ற மாதங்கியோடு எங்கள் செட்டியார் ஐய்யா சிநேகம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை நம்பவும் முடியவில்லை ; நம்பாமல் இருக்கவும் இயலவில்லைதான். ஐயா தனியாக இருக்கை யில் மாதங்கியைப் பற்றின விவகாரத்தைப் பற்றி முதலாளியிடம் இன்றைக்காவது கேட்டுத் தெளிய வேண்டும். எத்தப் புற்றிலும் எந்தப் பாம்பும் இருக்கத் தான் இருக்கும். நிதர்சனமான உலகத்தின் நித்தியமான நடைமுறை இதுவென்றே ஆகிவிட்டது. குளி ய ல் முடிந்ததும், வெளியே வந்தாள் அவள். மணி எட்டு ; நிமிடங்கள் பதினெட்டு, எப்போது பார்த்தாலும், பார்வதி மகாலட்சுமிதான் வெளி அழகிற்கு அழகுசேர்த்துக் கொண்டிருந்த சங்கிலி அடகுக்குப் போய்விட்டதால். அவளுடைய உள் அழகும் உடன் சேர்ந்து போய்விடாது ; போய்விடவும் முடியாது வகிடு எடுத்துச் சரிபார்த்துத் தலைவாரிக் கொண்டு, மையம் பார்த்துக் குங்குமம் வைத்துக் கொண்டாள்.