பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


பூவையைத் தேடிப் பூவும் நாடிவந்த தில் அவள் மகிழ்ந் தாள். நாளைக்கு முதல் தேதி என்றும் நினைவு கொசிறு தட்டியது, பிசிறு பாய்ந்த ஆறுதல் எட்டி ஒடியது- இங்கேயும் வழக்கம்போல், பற்றாக்குறை பட்ஜட்தான். பணத்தைக்கொடுத்து விட்டால், நகையைக் கொடுத்து விடுவார் சேட்ஜி. பணத்தை யார் கொடுப்பது? -கடவுளா ? எந்தக் கடவுள் ? ஏதோ ஒரு கடவுள் ! - அத்தக் கடவுள் என்றைக்குப் பணம் தருவார் ?... என்றைக்குச் சங்கிலியை மீட்பது ? என்றைக்கு அப்பாஅம்மா சந்நிதானத்திலே மாப்பிள்ளை புடைசூழ மாலை யும் கழுத்துமாகத் தோன்றி அவர்களின் பெற்ற வயிறு களில் அசலான பாலை வார்த்து அவர்களையும் மகிழச் செய்து, நானும் மகிழ்ச்சி அடைவதா? என் பிரச்னையைத் தீர்த்து வைக்க ஒரு கம்யூட்டராவது கண் பார்க்கலா காதா ? - மூச் ! ... புதிய கோட்டையை ஆக்கிரமித்து அங்கே கொடி கட்டிப் பறக்கத் திட்டம் புனைந்தவர் போன்று, நின்றது நிலைக்கத் தீவீரமாகச் சிந்தனைலசப் பட்டிருந்தார் அப்பா. அம்மா உப்புமா பிளேட்டுடன் வந்தாள். டி பன் சாப்பிட்டியா, பார்வதி' என்றாள். ஊம் கொட்டிய திருமகளைப் பார்த்ததும், தேள்கொட்டிய வேதனையை அடைந்தாள். உன் கழுத்தில் டாலர் செயினைக்காணல் லையேம்மா ?’ என்று பரதவிப்போடு விசாரணை நடத்தினாள். நடந்தகதை நடந்தது. வாய் அடைத்தது. நின்றது நின்றவாக்கில், பார்வதிக்குத் திருமணக் கவலை வந்தது. இப்போதெல்லாம் ஒரு நாளில் ஒராயிரம்