பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


"ஆமாம்மா! சாப்பிட்டுட்டு வேலைக்குப் போயிட்டு வா, பார்வதி, நேரம் ஆச்சுது ' என்று உட்புறத்திலிருந்து தீனமாகக் குரல் கொடுத்த புள்ளி ஆத்மநாதன்தான் ! பார்வதி சலனம் அடைந்தாள் : இவங்க தொனி நல்லாவே இல்லையே ?... ஒருவேளை இவங்களுக்கு நான் எப்பவுமே தீராத பிரச்சனையாகவே ஆக்கிடுவேனா?... அப்படி ஆயிட்டா, அப்பறம் இவங்க ரெண்டுபேரையும் உயிரும் உடம்புமாக நான் எப்படிக் காண முடியும் ?நெஞ்சு முகாரி ராகத்தில் விம்ம, பசி ஆதித்தாளம் போட அவள் ஒரு வழியாகக் காலைப் பலகாரம் சாப்பிட்டு முடித்தாள். உப்புமா வென்றால், உப்பு தூக்கலாகத் தான் இருக்கும் அதற்காக, இப்படித் தாகம் எடுப்பதில் அர்த்தம் இல்லை. லேடி டைப்பிஸ்ட் பார்வதி புறப்பட்டாள்!'போயிட்டு வர் றேன், அப்பா!... போய்வரேன் அம்மா!' என்று அன்போடும் பாசத்தோடும் சொல்லிக் கொண்டாள். 'பத்திரமாய்ப் போயிட்டு, பத்திரமாக வாம்மா!' பாரமும் பாசமும் ஒரே ராகத்தில் ஒரே பல்லவியைப் பாடின. தலைவாசலுக்கு வந்தாள் பார்வதி. கூறை பிய்ந்து பரிதாபமாகவும் அலங்கோலமாகவும் கிடந்த மாட்டுத் தொழுவத்தை இப்போதும் பார்வையிட்டாள். நினைவு கள் பொங்க, வேறுபுறம் திரும்பினாள். மாட்டுத் தொழுவத்தை இன்று பெரியதம்பி பிரித்து விடுவானாமே! இனி, அது எதற்கு ? வெளி வாசலுக்கு விரைந்தவள். திடுக்கிட்டாள் ! அங்கே