பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


ஒன்றும் சொல்லாமல் எதிர் அறைக்கு அழைத்துப் போனான் செந்தில். ‘அங்கேதான் இரண்டு ஜீவநாடகங் கள் நடந்துக்கினு இருக்குது நடந்துக்கினு இருக்கிற அந்த இரண்டு நாடகங்களும் அங்கேயேதான் முடியவும் போகுதுங்க!” வாய்ப்பேச்சு கண்ணிர் சொரிந்தது. உள்ளே - செந்தில்நாதன் பெற்றோர்கள் இருவருமே அப் போது சுயநினைவு இழந்து கிடந்தார்கள் ; இருவருக்குமே மண்டைகளில் பலமான கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. பார்வதியின் உயிர் துடித்தது , 'என்ன ஆச்சுங்க ?” என்று பதைப்போடு விசாரணை செய்தாள். எல்லாமே ஆயிடுச்சுங்க ... அப்பாவும் அம்மாவும் ஏற்கனவே இருதய நோயாளிங்க : இந்த லட்சணத்திலே, காலம்பற கார் விபத்துக்கு வேறே ஆளாகிட்டாங்க...” 'அட, கடவுளே !’ "ஏங்க, கடவுள் இருக்காருங்களா ?” "மிஸ்டர் செந்தில் ' "இந்தச் செந்தில் இருக்கானே செந்தில், இவன் பெரிய பணக்காரர் வீட்டுப் பிள்ளை மட்டும் இல்லே ; உண்மை யிலேயே உண்மையாகவே பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளையுந்தான் - அந்தப் புண்ணியமே இவனுக்குப் பாவமாகவும் ஆயிடுச்சு ; இவன் என்னவோ கனவு கண்டான் என்னமோ நடந்திடுச்சு ;) என்னென்னமோ ந - ந் து க் கிட் டி ரு க்கு து இன்னும் என்ன வெல்லாமோ ந ட க்க வும் போகுது ஊம். அம்மாவும் அப்பாவும் எப்பவோ என்னை மாப்பிள்ளைக்