பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


சிருக்கிற சோதனையான புண்ணிய கடமையும் தானுங்க!’’- மேனிச் சிலிர்ப்பு அவளுக்கு இன்னமும்கூட அடங்கலில்லை. உச்சி வெளிச்சம் கூடத்தை உச்சி மோந்தது. செந்திலின் உந்திக் கமலத்தினின்றும் புறப்பட்ட ஆனந்தச் சிரிப்பு அவன் இதழ்களில் மாவுக்கோலம் வரை கிறது. 'ஜரிகைப் பட்டு, ப்ளவுஸ் எல்லாத்தையும் பாத்ருமுக்கு எடுத்துப் போங்க உள்பக்கம் நல்லாவே நாதாங்கியைப் போட்டுக்கங்க : நொடியிலே, திருமணப் பெண்ணாகவேஷம் போட்டுக்கங்க; அந்த மாலைகளிலே ஒண்ணை எடுத்துப் போட்டுக்கிடுங்க ஒரு செகண்டிலே திரும்பி வந்திடுங்க பார்வதி , ...' என்று கெஞ்சினான். 'புனிதமான அன்புத் தேவதையான உங்களைப் புனித மானதொரு கல்யாணப் பெண்ணாக அன்பின் புனிதத் தோட வரவேற்கக் காத்து தவம் இருப்பேன், பாரு !' - பேச்சை முடித்தான் ; பரபரப்புக்கூடிய நடப்பு : நடவடிக்கை. 'ஆகட்டும் ' என்றாள் பார்வதி. கைந்நொடிப் பொழுது தயங்கினாள் ; பின் உடைகளோடு உள் நடந் தாள். 'கல்யாணம்னா தாலி வேணுமே ? ... செந்தில் மறந்திட்டாரோ, என்னமோ, தெரியலையே ? - அவள் செருமுகுறாளா, இல்லை, பொருமுகிறாளா ? அந்த அந்தரங்கம் அவளுடைய அந்தரங்கத்துக்கே புரியவில்லை ! அப்போதைய வினாடிகளுக்கு மகிமை கூடுதல் ! அதன் விண்வெளியில் மிதந்தான். அப்பாவும் அம்மாவும் கொடுத்து வச்சவங்கதான் அவங்களோட இறுதிக் கனவு பூர்த்தியடைஞ்சிடப் போகுது , ஆமாம் ; என்னோட கடைசிக் கடமையும் நிறைவேறப் போகுது 1அப்பாலே, எனக்கு கவலையே கிடையாதாக்கும் ...